அன்பின் மழை

Vinkmag ad

அன்பின் மழை

திருச்சி A.முஹம்மது அபூதாஹிர்

thahiruae@gmail.com

  • தம் சக மனித இனம்

அணைக்கட்டுகள் நிரம்பி

வெளியேற்றப் பட்ட போது

அன்பு மனம் கொண்டு

கட்டியணைத்து

அவர்களை வரவேற்றார்கள் பலர் !

 

  • நீர்

பலரின் உடமைகளை எடுத்துச் சென்றதால்

கண்ணீரோடு இருந்தவர்களுக்கு

அவர்கள் உணவும் உடையும் கொடுத்து

அரவணைத்தார்கள்!

 

  • அலை இந்து சகோதரனை

அடித்துச் செல்ல வந்த போது

முஸ்லிம் சகோதரன் தடுத்து காப்பாற்றினான்!

கிறிஸ்தவ சகோதரனை

வெள்ளம் கொண்டுச்  செல்ல வந்த போது

இந்து சகோதரன் கை பிடித்து காப்பாற்றினான்!

 

 

  • வார்த்தைகளால்

ஏசிய மனிதர்கள்

அன்பால் பேசிக் கொண்டார்கள்!

 

  • மனிதாபிமானத்தில்

எல்லா மக்களும்

முன்னணியில் இருந்தார்கள்!

அரசியல்வாதிகள்

அனைவரும் அங்கே தோற்றுப் போனார்கள்!

 

  • பள்ளிவாசலில் இந்துக்கள்!

கோவிலில் சென்று உணவளித்த முஸ்லிம்கள்!

மத வெறியர்கள் எல்லாம்

மறைந்துப் போனார்கள்!

 

  • காந்தியின் வரலாற்றில்

புதிய பதிப்பு வெளியிடப் பட்டது!

“மக்களை காப்பாற்ற வந்த

அனைவரும் மகாத்மாக்கள்” என,

இந்திய வரலாறு

புதிதாய் எழுதப் பட்டது!

 

  • கடவுளுக்காக மட்டுமே

திறக்கப் பட்ட வணக்கஸ்தலங்கள்

மனிதர்களுக்காக திறக்கப் பட்டன!

மதத் தளங்களில்

மதங்கள் மறக்கப் பட்டு

மனிதர்கள் வரவேற்கப் பட்டார்கள்!

 

  • நிறைய பாபரி மசூதிகள்

நாடு முழுவதும்

கட்ட முடிவுச் செய்யப் பட்டது!

தொழ மட்டுமல்ல

ஆபத்துக் காலத்தில்

அனைத்து மக்களும் அவற்றில்  தங்கிடவும்தான்!

 

  • அன்பின் மழை

அடிக்க தொடங்கிய போது

அடை மழை நின்றுப் போனது!

கருணை வெள்ளம்

திரண்டு வந்த போது

கரை புரண்ட வெள்ளம் வடிந்து போனது!

—————————————————–

News

Read Previous

நமது வேர்களை தெரிந்து கொள்வோம் – டாக்டர் ராஜா முஹம்மது

Read Next

மகான் மன்னர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *