விழி அமைப்பின் இலவச உயர்கல்வித் திட்டம்
விழி அமைப்பின் இலவச உயர்கல்வித் திட்டம்
பொருளாதாரத்தில் பின்னடைந்த மாணவர்கள் பட்டதாரிகளாக மாறுவதற்கு இலவச உயர்கல்வித் திட்டத்தை விழி அமைப்பு 2020-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தியதன் மூலம் ஏராளமான மாணவர்கள் பயனடைந்தனர். அதனைத் தொடர்ந்து 2021-22 ஆம் ஆண்டிற்கான விண்ணப்பங்களைப் பெறுவதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் தேர்வு செய்யப்படுகின்ற மாணவர்களுக்கு தமிழகத்திலுள்ள சிறந்த கல்லூரிகளில் பொறியியல், கலை மற்றும் அறிவியல் உள்ளிட்ட படிப்புகளை எந்தவித கட்டணமுமின்றி படிப்பதற்கு ஏற்பாடு செய்யப்படும்.
விருப்பமுள்ள மாணவர்கள் முதற்கட்ட தகவலை www.application.vizhi.org என்ற இணையதள விண்ணப்பத்தின் வாயிலாக 25.04.2021-க்கு முன்பாக விண்ணப்பிக்க வேண்டும்.
கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதார மேம்பாட்டிற்கான நிகழ்ச்சிகளை தொடர்ச்சியாக நடத்திவரும் தமுமுக-வின் மனிதவள மேம்பாட்டுப் பிரிவான விழி-யின் இந்த திட்டத்தின் மூலமாக மாணவர்கள் பயனடைய அதிகம் SHARE செய்யங்கள்.
மேலும் விபரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய கைபேசி எண்: 9944877673.