படைத்தவனின் முடிவை ஏற்கப் பழகுங்கள்!

Vinkmag ad
உங்களுடன் நான் – மனம் விட்டு 02
 
பெ
ற்றவர்களுக்குப் பிள்ளைகளின் நலனும் முன்னேற்றமும்தான் கனவுபிள்ளைகள் வளரவளர பெற்றோர்கள் பசியைமறப்பார்கள்உறக்கத்தைத் துறப்பார்கள்உடன் பிறந்தவர்களைக்கூடபிள்ளைகளுக்காக –கூடாது என்றாலும்– பகைப்பார்கள்.பேச்சுமூச்சுஉழைப்பு எல்லாவற்றையும் பிள்ளைகளுக்காக அர்ப்பணிப்பார்கள்.
 
சுருங்கக் கூறின்பிள்ளைகள்தான் பெற்றோரின் உலகம்தன்னைவிடதன் முன்னேற்றத்தைவிடப் பிள்ளைகளின் முன்னேற்றமேஅவர்களுக்கு இலக்குதான் தோற்றாலும் பிள்ளை ஜெயிக்க வேண்டும்தன் இழப்பு பெரிதல்லபிள்ளையின் சிறு சறுக்கல்கூட பேரிழப்புஎன எண்ணுவார்கள்.
 

இதனால்தானோஎன்னவோதந்தையைப் பற்றிப் புகார் தெரிவிக்க வந்த மகனிடம், “நீயும் உன் செல்வங்களும் உன் தந்தைக்கேஉரியவை” என நபி (ஸல்அவர்கள் சொன்னார்கள். (இப்னுமாஜா)

 
தங்களின் தியாகத்திற்குப் பிள்ளைகளிடமிருந்து பெற்றோர்கள் நன்றிக்கடனை எதிர்பார்ப்பதில்லைபிள்ளைகள் நோகவைத்தாலும் பலபெற்றோர்கள் சாபம் கொடுப்பதில்லைஅவன் ஒதுக்கிவைத்தாலும் விலகி நின்று வாழ்த்தும் உள்ளம் அவர்களுடையதுஅவன்வாழ்வதன்மூலம் தான் வாழ்வதாகப் பூரித்துப்போகிறார்கள்.
 
பிள்ளைகளின் படிப்புவேலைவாய்ப்புதிருமண வாழ்க்கை என ஒவ்வொன்றிலும் பெற்றோரின் ஈடுபாடும் கவலையும் வியக்கத்தக்கவைஎல்லாவற்றையும்விடதனக்காக இறைவனிடம் இறைஞ்சும்போது கண் கலங்காத பெற்றோர்பிள்ளைக்காக துஆசெய்யும்போது மட்டும் தேம்பித் தேம்பி அழுகிறார்கள்.
 
இதோ என் சொந்தக் கதைஎன் இளைய மகன் –மூத்த மகனைப் போன்றே– படிப்பில் சுட்டிவேலூர் ‘பாகியாத்தில் நான்பணியாற்றியபோது அங்கு பிறந்தவர்துவக்கப் பள்ளி படிப்பு அங்குதான்.
 
1998இல் சென்னை வந்தபின் இராயப்பேட்டையில் உள்ள ஒரு சாதாரண மேல்நிலைப் பள்ளியில் பத்துவரை படிப்பு; 11,12 அதே பகுதியில்வேறொரு பள்ளியில்என்னை வற்புறுத்தி சேர்ந்து படித்தார்.
 
பிளஸ்-2 தேர்வில்மருத்துவக் கல்லூரி படிப்பிற்கு வேண்டிய முக்கியமான மூன்று பாடங்கள் ஒவ்வொன்றிலும் 200க்கு 199மதிப்பெண்கள்தினமணி உள்பட சில பத்திரிகைகளில் புகைப்படத்துடன் செய்தி வெளிவந்ததுஇப்போது இருப்பதைப்போல பிளஸ்2மதிப்பெண்களைக் கொண்டே மருத்துவம்பொறியியல் படிப்புகளில் சேர முடிந்திருந்தால்பையனுக்கு நிச்சயமாக எம்.பி.பி.எஸ்.படிப்புக்கான இடம் —அதுவும் சென்னையிலேயே– கிடைத்திருக்கும்!
 
ஜெயலலிதாவின் முந்தைய ஆட்சிக் காலம்நுழைவுத் தேர்வு உண்டாஇல்லையா என்பதில் குழப்பமோ குழப்பம்உண்டு என்பர்ஒருநாள்இல்லை என்பர் மறுநாள்இந்தக் குழப்பத்தில் நுழைவுத் தேர்வுக்கும் பையன் தயாராகிக்கொண்டிருந்தார்இறுதியாகநுழைவுத்தேர்வு நடத்தியாக வேண்டும் என நீதிமன்றம் தீர்ப்பளித்துவிட்டதுஅப்போதும்கூடஉச்சநீதிமன்றத்தில் அரசு மேல்முறையீடுசெய்யப்போகிறது என்ற செய்தி வேறு.
 
முடிவில் நுழைவுத் தேர்வு நடந்துமுடிந்ததுஅதில் கலந்துகொண்டாலும் திருப்தியாகத் தேர்வு எழுதவில்லை என்று தெரிந்தது.கலந்தாய்வு (கவுன்சிலிங்நடந்தபோதுமருத்துவப் படிப்பில் எம்.பி.பி.எஸ்இடமும் கிடைக்கவில்லைபி.டி.எஸ்இடமும்கிடைக்கவில்லைசரி மருத்துவத் துறையை மறந்துவிட்டுபொறியியல் பாடத்தில் சேர்ந்துகொள்ளுமாறு நாங்கள் அனைவரும்எவ்வளவோ எடுத்துச்சொல்லியும் பையன் இசையவில்லை.
 
துணை மருத்துவத் துறையில் பிஸியோதெரபி (PT) படிப்பிலாவது நான் சேர்ந்தே ஆவேன் என்று பிடிவாதம் பிடித்துஅதையேதேர்ந்தெடுத்தார்முதல் ஆளாக இடமும் கிடைத்தது.
 
இங்கேதான்நான் குறிப்பிட்டு உணர்த்த விரும்பும் ஒரு தகவல் உண்டுமருத்துவப் படிப்பிற்கான இடம் கிடைக்காது என்றுமுடிவானபோதுபையன் மட்டுமன்றிதந்தையாகிய நான் உள்பட குடும்பத்தார் அனைவரும் சோகத்தில் ஆழ்ந்துவிட்டோம்கைகூடாதுஎன்று தெரிந்தும் பல்வேறு முயற்சிகள்சந்திப்புகள்ஆலோசனைகள்இவ்வளவு ஓதிப்படித்த நானே மனத்தளவில் பெரும்பாதிப்புக்குள்ளானேன்கலங்கிப்போனேன்என்ன இப்படி ஆகிவிட்டதேஎன்ற கவலை என்னைத் தின்றதுசோகம் என்னைக் கொன்றது.
 
நான் ‘பாக்கியாத்தில் ‘ஃபாஸில்வரை ஓதிமுடித்த அடுத்த ஆண்டுஅங்கேயே ஆசிரியர் பணிக்குப் பல முயற்சிகள் மேற்கொண்டேன்.ஒன்றும் பலிக்கவில்லைஅப்போதுகூட ஏற்படாத மனவலி இப்போது ஏற்பட்டதுதான் ஆச்சரியம்!
 
ஒரு வழியாக இயல்பு நிலைக்குத் திரும்பினோம்நான் என்னைத் தேற்றிக்கொண்டதுடன் பையனையும் தேற்றினேன்அப்போது நான்சொன்ன வார்த்தைஎம்.பி.பி.எஸ்ஸில் கிடைக்காத ஒரு முன்னேற்றம் இந்தப் படிப்பில் உனக்குக் கிடைக்கலாம்அல்லாஹ்நாடிவிட்டான்அதை முழுமனதோடு ஏற்றுஇத்துறையில் நீ சாதித்துக்காட்ட வேண்டும்சாதிப்பாய் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு.
 
சென்னையில் பிஸியோதெரபிக்கு இடம் கிடைத்ததுசென்னை மருத்துவக் கல்லூரி (MMC), அரசினர் புணர்வாழ்வு மருத்துவ மையம்(GIRM) ஆகிய இரண்டிலும் இளங்கலை பிஸியோதெரபி முடித்தார்இதே துறையில் முதுகலைப் பட்டப் படிப்பிற்குத் தமிழ்நாட்டில் அரசுகல்லூரி கிடையாதுதனியார் கல்லூரியில் லட்சங்கள் செலுத்தி சேர வேண்டும்அல்லது வெளிமாநிலங்களில் உள்ள மத்திய அரசுநடத்தும் கல்லூரிகளில் அனைத்திந்திய கோட்டாவில் உள்ள இரண்டொரு இடத்திற்குத் தேர்வு எழுதி வெற்றிபெற வேண்டும்.
 
லட்சங்கள் கொடுத்துப் படிக்கவைக்க நம்மிடம் ஏது பணம்தேர்வுக்காகச் சொந்த முயற்சியில் வீட்டிலேயே 3 மாதங்கள் படிக்கஆரம்பித்தார்இதற்கிடையே பி.டிமுடித்தவர்களுக்கு வேலூர் சி.எம்.சிமருத்துவமனையில் ஓராண்டுப் பயிற்சி அளிக்கப்படுவதாகஅறிந்துஅதற்கான தேர்வுக்கும் படித்தார்இறுதியில்மும்பையில் உள்ள மத்திய அரசு கல்லூரிஒரிஸ்ஸாவில் உள்ள மத்திய அரசுகல்லூரிவேலூர் சி.எம்.சிஆகிய மூன்று ஊர்களிலும் இருந்த இரண்டுஅல்லது மூன்று பொது இடங்களுக்காகத் தேர்வு எழுதினார்.
 
மூன்றிலும் வெற்றி பெற்றார்முதலில் சி.எம்.சிமுடிவுதான் வந்ததுஅங்கு சேர்ந்து பயிற்சியைத் தொடங்கியிருந்த வேளையில்மும்பையின் முடிவு வரவேஇதைவிட மும்பையே மேல் என்று யோசனைகள் முன்வைக்கப்பட மும்பையைத் தேர்ந்தெடுத்தார்.
 
மும்பையில் உள்ள மருத்துவ மையத்தில் சேர்ந்தார்அது மூன்றாண்டு படிப்புஇந்தியாவிலேயே முதுகலை பிஸியோதெரபி (MPT)படிப்புக்கு மும்பையில் மட்டுமே 3 ஆண்டு படிப்பு உண்டுஇதில் இறுதி ஆண்டு ஆராய்ச்சிக்கு ஒதுக்கப்பட்டதுஇதற்கிடையில்ஒரிஸ்ஸாவிலும் தேர்வானார்ஆனால்அதை ஏற்கவில்லை.
 
மூன்றாண்டு முதுகலை பட்டப்படிப்பு (M.P.Th) முடிந்தவுடன் வேலை தேடும் படலம்சென்னையில் அப்போலோ மருத்துவமனை உள்பட,அணுகிய எல்லா இடங்களிலும் வேலைக்குத் தேர்வானார்இதற்கிடையில்தான் படித்த கல்லூரியைச் சேர்ந்த மருத்துவமையத்திலேயே ஓரிடம் காலி என்றும் அதற்குத் தேர்வு எழுதி வென்றால்நேர்முகத் தேர்வில் கலந்துகொள்ளலாம்அதிலும் வென்றால்இங்கேயே நீ பணியாற்றலாம் என்றும் அவருடைய வழிகாட்டிகள் கூறஎதற்கும் எழுதிவைப்போம் என்று தேர்வு எழுதினார்.
 
இறையருளால் அதில் வென்றார்பின்னர் நேர்முகத் தேர்வில் கலந்துகொண்டு அதிலும் தேர்வானார்இப்போது அங்கேதான்பணியாற்றிவருகிறார்இடையிடையே சுயமுயற்சியாகப் படித்துத் தேர்வுகள் எழுதி முன்னேறவும் தொடர்ந்து முயன்றுவருகிறார்.அண்மையில் C.M.P. (Certificate Mulligan Practitioner) என்ற சான்றிதழைத் தேர்வெழுதி பெற்றார்.
 
ஒருகால் எம்.பி.பி.எஸ்இடம் கிடைத்துப் படித்திருந்தால்கூடஇந்த அளவுக்குத் தன் துறையில் முன்னேறியிருக்க முடியுமா என்பதுசந்தேகம்தான்மருத்துவத்தில் முதுகலைப் பட்டம் (M.D; M.S.) பெற வேண்டுமானால்பல்லாண்டுகள் காத்திருக்க வேண்டும்அல்லதுகோடிகளைக் கொண்டுபோய்க் கொட்ட வேண்டும்இரண்டுமே நமக்கு ஒத்துவராது.
 
எட்டு ஆண்டுகளுக்குமுன் இந்த ரகசியத்தை யார் அறிவார்அரசு வேலைஅதுவும் மத்திய அரசு வேலையாரும் கவனிக்காத ஒரு புதியதுறையில் சாதிப்பதற்கான வாய்ப்புஎல்லாவற்றையும்விட அரசு கல்லூரிகள் என்பதால் படிப்பிற்குச் செலவில்லை.
 
ஆகநாம் ஒன்று நினைப்போம்இறைவன் வேறொன்று நினைத்திருப்பான்அறிவுக்கு எட்டியவரையில் நாம் முயல்கிறோம்நாம்எதிர்பார்த்தது வாய்க்கலாம்அல்லது கை நழுவிப்போகலாம்ஆனால்அல்லாஹ் எதை முடிவு செய்து தருகிறானோ அதைதொடக்கத்திலேயே மனமுவந்து ஏற்கப் பழகிக்கொள்ள வேண்டும்நமது தேர்வைவிட இறைவனின் தேர்வில்தான் நமக்கு நன்மைஇருக்கும் என மனமார நம்ப வேண்டும்அப்போது வாழ்க்கையில் மணம் வீசும்புயல் வீசாது.
 
விரும்பியது கிடைக்கவில்லை என்றவுடன் நொந்துபோய் உட்கார்ந்துவாழ்க்கையைச் சாக்கடையாக்கிக்கொள்ளக் கூடாதுவிதியைஎண்ணி நோகக் கூடாதுகாசு கொடுத்து சீட்டு வாங்கிக் கொடுக்க முடியாத பெற்றோரை அவமதிக்கக் கூடாதுஅப்படி சீட்டு வாங்கவேண்டும் என்பதே முதலில் சரியா என்பது விவாதத்திற்குரிய ஒன்று.
 
இது படிப்புக்கு மட்டுமல்லவாழ்க்கையின் எல்லாத் துறைகளுக்கும் எல்லா நிகழ்வுகளுக்கும் பொருந்தும் என்பதை இளைஞர்கள்புரிந்துகொண்டால் வாழ்க்கை வசப்படும்வசந்தமும் வந்துசேரும்.
 

News

Read Previous

14வது உலகத் தமிழ் இணைய மாநாடு 2015

Read Next

அடிமைத்தனமல்ல… அருட்கொடை!

Leave a Reply

Your email address will not be published.