நம் நாட்டை பின்னுக்கு தள்ளும் எட்டு விஷயங்கள்!

Vinkmag ad
நம் நாட்டை பின்னுக்கு தள்ளும் எட்டு விஷயங்கள்!
 
 
1. சாலையில் எச்சில் துப்புதல் :

 
இதில் கண்டிப்பாக ஒவ்வொருவருக்கும் பங்கு உண்டு. அது சூவிங் கம் முதல் குட்கா வரை. இவற்றைக் கணக்கெடுத்தால் நான்கு ஜென்மங்கள் எடுக்கும்.
2. சிக்னலை மீறுவது, தவறான பாதையில் ஓட்டுவது :
இது இந்தியாவை பொறுத்தவரை மிக சர்வ சாதாரணமான விடயம் ஆகிவிட்டது. இவற்றை தடுக்க கண்டிப்பாக மாற்றம் வர வேண்டும். தேவையில்லாமல் ஒலி எழுப்புவதுமே தவறான ஒன்று. போக்குவரத்து நெரிசல் தான் இங்கே மோசமான ஒன்று.
3. குப்பைகளை கொட்டுவது :
நம்மவர்களுக்கு அழகான இடத்தை பார்த்தாலே குப்பை கொட்ட தோன்றுகிறது. இதற்க்கு படித்தவன் படிக்காதவன் என்ற பாகுபாடே இல்லை. இதனாலே பல கலைகளையும் நிலைகளையும் இழந்து நிற்கிறோம்.

 

 
4. வரிசையை முந்தியடித்தல் :

 

இந்த இடத்தில வீரத்தை சிலர் தப்பாக புரிந்துவிட்டனர் போலும். எதற்கு எடுத்தாலும் அவசரம், பொறுமை என்பது எள்ளளவும் இங்கே இல்லை. நிற்கிற ஒருவனும் முன்னும் பின்னுமாய் தள்ளிக்கொண்டு தான் நிற்கிறான்.
5. விட்டுகொடுக்காத பழக்கம் :
அனைத்திற்கும் விட்டுகொடுக்க சொல்லவில்லை, சில காரணங்களுக்கு மட்டும் கூட இங்கே இறங்க மறுக்கின்றனர். ஒரு பொது மின்தூக்கியில் ஒரே முறையில் முன்னூறு பேர் ஏற நினைத்தால் அது எங்கனம். அவசர ஊர்தி கூட சாலைகளில் வழிக்காக பிச்சை எடுக்கின்றன.

 

 
6. நடுத்தர நிலையை ஏற்றுகொள்வது :

 

நடுத்தர நிலையில் இருந்து முன்னேற நினைப்பது சரியான விஷயம் தான், ஆனால் அதற்காக இங்கே எவ்வளவு பொய் புரளிகள், பித்தலாட்டங்கள், லஞ்சம், ஊழல்.. இங்கே சகிப்புத்தன்மை தண்ணீரில் கரையும் உப்பு தான். இங்கே உண்மை தொண்டனாய் இருக்க யாருக்கும் ஆசை இல்லை, தலைவன் பதவிக்கே முந்தியடிகின்றனர்.
7. மனிதனை மனிதன் மதிப்பது இல்லை:
நம் மக்களை நாமே மதிக்காத போது எப்படி முன்னேற முடியும். முன்னுக்கு வருபவனை அழிக்க மட்டுமே நினைப்பது.

 

 
8. ஜாதி வெறி- மத வெறி – இன வெறி:

News

Read Previous

அயல் மோகத்தால் அழிந்து வரும் நாட்டுப்புறக்கலைகள்

Read Next

ஒருவர் இறந்த பின் மின் மயானத்தில் பாடப்படும் பாடல்

Leave a Reply

Your email address will not be published.