6012. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’
ஒரு முஸ்லிம் மரம் ஒன்றை நட்டு
அதிலிருந்து ஒரு மனிதனோ அல்லது
(மற்ற) உயிரினமோ உண்டால்,
(அதன் காரணத்தால்) ஒரு தர்மம் செய்ததற்கான
பிரதிபலன் அவருக்குக் கிடைக்காமல் இருப்பதில்லை.
என அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.
Sahih al Bukhari : Volume :6 Book :78