புனிதமிகும் ரமலானே வருக
புனிதமிகும் ரமலானே வருக,உயர் பண்புகளை தருக!
இறை கடமைகளில் ஒன்றாய் இடம் பிடித்த ரமலானே வருக.
வறியவர்களின் பசியை வலிமையானவர்களுக்கும் கடமையாக்கிய ரமலானே வருக.
இறையில்லம் நாடாத மனிதர்களையும் முதல் வரிசையில் அணி வகுக்க வைக்கும் ரமலானே வருக.
பாவத்தின் அடையாளமாய் வாழும் சில மனிதர்களை அந்த பாவத்தை விட்டும் விலக்கி வைக்கும் ரமலானே வருக.
பொய்,கோள்,புறம் பேசுவோரின் நாவை அடக்கி வைக்கும் ரமலானே வருக.
இரக்கம்,கருணை,தர்மத்தின் அவசியத்தை உணர்த்தும் ரமலானே வருக.
குறைவான அமல்களுக்கும் நிறைவான புண்ணியத்தை அள்ளித்தரும் ரமலானே வருக.
சுவனத்தின் உரிய இடத்திற்கு பரிந்துரைக்கும் ரமலானே வருக.
வல்லோனின் அன்புக்குரிய ரமலானே….உன்னோடு இணைந்து கொள்ளும் வாய்ப்பினை அனைவருக்கும் தருக.
புனிதமிகும் ரமலானே வருக,உயர் பண்புகளை தருக!
அன்புடன்
கீழை ஜஹாங்கீர் அரூஸி
Tags: ரமலான்