பசி

Vinkmag ad

 

–    கவிஞர் மு ஹிதாயத்துல்லா –

நோன்பின் மாண்பை உணருங்கள் !

நோய் நொடியின்றி வாழுங்கள் !

மாண்புடைய பிறை ரமலானில்

மகிழ்வே பூக்க வரும் நோன்பே !

 

கல்பின் தூசி கழுவிடலாம்

கவலை வென்று வாழ்ந்திடலாம்

சொல்வார் பெரியோர், நோன்பாளர்

சுவனச்சாவி உடையோ ராம் !

 

முப்பது நாளும் நோன்பேற்று

முறையாய் அவனைத் தினம் போற்றி

இப்புவி மீதில் எழிலாக

இன்பம் கண்டே வாழ்ந்திடுவீர் !

 

தனித்தி ருப்பவனைத் தனித்தி ருந்து

தயவாய் அவனின் தயைகேட்டு

பசித்தி ருந்தே ஆன்ம சுகம்

பலவாய் நாமே பெற்றிடவும்

 

விதித்த இறைவன் கட்டளையை

விரும்பி நாமே நோன்பேற்போம் !

குதித்தே வளங்கள் வாழ்வில் வரும் !

கொஞ்சி இறையருள் கூடிவரும் !

 

( 1981 ஆம் ஆண்டு வெளியான கதிர்கள் என்ற நூலிலிருந்து )

News

Read Previous

எண்ணம் பூக்கும்

Read Next

திருமலர் மீரான் கவிதைகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *