எண்ணம் பூக்கும்

Vinkmag ad

——  கவிஞர் ஹிதாயத்துல்லா, இளையான்குடி ————-

 

 

சுவனம் சென்றிட

துயரம் வென்றிட

தொழுகை செய்யுங்கள் !

 

சுகமே கண்டிட

சுவையே வந்திட

தொழுகை செய்யுங்கள் !

 

கவனம் மனதினில்

கடவுள் ஆணையைக்

கருத்தில் வையுங்கள் !

 

கவலை ஏகிட

களிப்பாய் ஆகிட

தொழுகை செய்யுங்கள் !

 

புவனம் தழைத்திட

பூமான் நபிகளின்

சுவடைப் பாருங்கள் !

 

பொலிவாய் வாழ்ந்திட

புன்னகை சேர்ந்திட

தொழுகை செய்யுங்கள் !

 

எவரும் இன்னும்

தொழுகா திருந்தால்

எடுத்துக் கூறுங்கள் !

 

எண்ணம் பூத்திடும்

இன்பம் சேர்ந்திடும்

என்றே கூறுங்கள் !

 

( கதிர்கள் எனும் நூலிலிருந்து )

 

News

Read Previous

தனிமை!

Read Next

பசி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *