முதுகுளத்தூர் பெரிய பள்ளிவாசல் தலைமை இமாமின் தாய் மாமா வஃபாத்து
முதுகுளத்தூர் பெரிய பள்ளிவாசல் தலைமை இமாமின் தாய் மாமா வஃபாத்து
முதுகுளத்தூர் பெரிய பள்ளிவாசல் தலைமை இமாம் மௌலவி அஹமது பஷீர் சேட் ஆலிம் அவர்களின் தாய் மாமாவும், அஹமது இம்தாதுல்லா மற்றும் அஹமது இஸ்மத்துல்லா ஆகியோரின் நன்னாவுமாகிய அப்துல் ஹமீது பாகவி ( வயது 95 ) அவர்கள் இன்று 24.06.2015 புதன்கிழமை பார்த்திபனூரில் வஃபாத்தானார்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
பார்த்திபனூர் ஜும்ஆ பள்ளிவாசலில் சுமார் 70 ஆண்டுகளுக்கும் மேலாக இமாமத் பணியை மேற்கொண்டு வந்தவர்.
இதற்காக வேலூர் பாகியத்துஸ் ஸாலிஹாத் அரபிக் கல்லூரியில் கௌரவிக்கப்பட்டார்.
இன்ஷாஅல்லாஹ் 25.06.2015 வியாழக்கிழமை பார்த்திபனூர் ஜும்ஆ பள்ளிவாசல் மையவாடியில் மதியம் 3.00 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும்
தொடர்பு :
மௌலவி பஷீர் சேட் ஆலிம் : 944 36 10 495