கமுதி-முதுகுளத்தூர் ஐக்கிய ஜமாஅத் செயலாளர் முகமது மீரா மரணம்
கமுதி-முதுகுளத்தூர் ஐக்கிய ஜமாஅத் செயலாளர் முகமது மீரா மரணம்
முஸ்லிம் ஐக்கிய ஜமாத் இரங்கல்.
இராமநாதபுரம் மாவட்ட முஸ்லிம் ஐக்கிய ஜமாஅத் பொதுச் செயலாளர் ஏ.ஜெய்னுல் ஆலம் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியுள்ளதாவது.
கமுதி மற்றும் முதுகுளத்தூர் வட்டார முஸ்லிம் ஐக்கிய ஜமாத்தின் செயலாளரும் கமுதி ரஹ்மானியா பள்ளி டிரஸ்டியுமானமான ஹாஜி V.N U. முஹம்மது மீரா(50) அவர்கள் உடல் நலக்குறைவால் இன்று (04.07.20)கமுதியில் அன்னாரது இல்லத்தில் வபாத்தானார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.அன்னாரின் ஜனாஸா இன்று மாலை 5 மணிக்கு கமுதி பெரிய பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
கமுதி மற்றும் முதுகுளத்தூர் வட்டார முஸ்லிம் ஐக்கிய ஜமாஅத் செயலாளராக இருந்து மிகச் சிறப்பாக பணி செய்துவந்தவரும் கமுதி பள்ளிவாசல் மற்றும் பள்ளிக்கூடங்களில் நிர்வாகியாக பொறுப்பேற்று பணியாற்றிவந்தவரும் குறிப்பாக தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் பொறுப்பாளராக இருந்து அனைத்து சமுதாய மக்களிடமும் நன்மதிப்பை பெற்றவரும். கலை இலக்கிய சேவைகளில் தன்னை அர்ப்பணித்துக்கொண்டவருமான முஹம்மது மீரா அவர்கள் திடீரென வபாத்தான செய்தி அதிர்ச்சியளிக்கிறது.
எல்லாம் வல்ல இறைவன் அவர்களை இழந்து வாடும் குடும்பத்தாருக்கு அழகிய பொறுமையை தந்தருள வேண்டும் என்றும் அன்னாரின் குடும்பத்தாருக்கு ஐக்கிய ஜமாத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம்.பொதுவாழ்வில் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டு செயல்பட்ட முகமது மீரா அவர்களின் மறுமை வாழ்விற்காக அனைவரும் துஆ செய்யுமாறு மாவட்ட ஐக்கிய ஜமாஅத் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.