கொரோனா
அன்று…
கூடி வாழ்ந்தால்
கோடி நன்மை…!
இன்று…
கூடி வாழ்ந்தால்
கொரனாவுக்கே நன்மை…!
அன்று…
ஒன்றுபட்டால்
உண்டு வாழ்வு…!
இன்று…
ஒன்றுபட்டால்
உண்டு சாவு…!
அன்று…
தொட்டால்
பூ மலரும்…!
இன்று…
தொட்டால்
நோய் பரவும்…!
அன்று
ஒண்ணாயிருக்கக்
கத்துக்கனும்…!
இன்று
ஒதுங்கி இருக்கக்
கத்துக்கனும்…!
அன்று…
தீண்டாமை ஒரு
பாவச் செயல்…!
இன்று…
தீண்டாமை
பகுத்தறிவின் செயல்…!
அன்று…
உலா வந்தால்
உடலுக்கு நன்மை…!
இன்று…
உலா வந்தால்
உயிருக்கே தீமை…!
(கொரோனாவை வெல்வோம்)