எனக்கான நிலவா நீ?
எனக்கான நிலவா நீ?
நீ எனக்குள் இருப்பவள்! என்றும் இனிப்பவள்!
என் இதயம் சுமப்பவள்!
நினைவுகளின் பெருவெள்ளத்தால் சூழ்ந்துகிடப்பவள்!
என்னை அணைப்பவள்! என்றே வரிவரியாய்
உன்னைப் பற்றி எழுதிக்கொண்டே இருக்கலாம்! ஆம்
உன்னைப் ‘பற்றிய’ பின் எனக்கென்ன குறை?
கரை காணா கடல்போல நானும் விரிந்து கிடக்கிறேன்!
பிரிவேதுமில்லாத வானம்போல் நான் பரந்து கிடக்கிறேன்!
எழிலான என் ராணி! எனக்கான நிலவா நீ?
காவிரிமைந்தன்
Tags: நிலவு