உடைகளில் மாற்றங்கள் இன்றி – நீயும்
உயரமே சென்றதற்கு நன்றி-உன்
உள்ளமதில் உள்ளதினி கல்வியெனும்
உழைப்பினை நம்பு – அதுவே தெம்பு!
தடைகளைத் தாண்டிய உச்சி- உன்றன்
தயக்கமிலாப் பேராற்றல் மெச்சி- யானும்
சத்தமுடன் சொல்லுவதும் இவ்வுலகின்
சான்றோர்கள் கூற்று- என்றே போற்று!
— அதிரை கவியன்பன் கலாம், அபுதாபி