உமக்கொன்று சொல்வேன்
உமக்கொன்று சொல்வேன்
– ஈரோடு தமிழன்பன்
தலையே ! நீ குனியாதே !
தடுமாற வைக்கின்ற
கொலைகாரக் கரோனாவைக்
குப்புற வீழ்த்துவாய்
தலையே ! நீ குனியாதே !
கண்களே ! காணீரோ !
கணக்கின்றி இறக்கின்றார்
தண்டிக்க ஆளின்றித்
தலை தூக்கும் கரோனாவை
கண்களே ! காணீரோ !
செவிகாள் ! கேளீரோ !
செயத்தக்க யாவென்று
கவலித்தே அறிவாளர்
சொல்கின்ற கருத்தெல்லாம்
செவிகாள் ! கேளீரோ !
மூக்கே ! நீ முகம் மூடு !
முற்றும் முன் சளிகண்டு
காக்கவே வழியுண்டு !
கவசத்தை வாயோடு
மூக்கே ! நீ முகம் மூடு !
கைகளே ! கழுவீரோ !
கடுந்தீய கரோனாவால்
கைப்பற்ற வழியின்றிக்
கழுவுங்கள் ! கழுவுங்கள் !
கைகளே ! கழுவுங்கள் !
கால்களே ! அடங்குங்கள் !
ஊரடங்குக் கட்டளையை
மேலாக மதித்துள்ளே
வீட்டிலே இருப்பீர்கள் !
கால்களே ! அடங்குங்கள் !
மனமே ! நீ மதிப்பாயே !
அரசாங்கம் வகுப்பதைத்
தினந்தோறும் பின்பற்றித்
தீமையைத் தீர்த்திடுவாய்
மனமே ! நீ மதிப்பாயே !
வாயே ! நீ வாழ்த்தாயோ !
வழி சொல்லிக் கரையேற்றும்
தூய நல் மருத்துவத்
தொண்டர்கள் பணி போற்றி
வாயே ! நீ வாழ்த்தாயோ !
To know about the poet, and the rare honors he received from Tamils,
http://karanthaijayakumar.