புல்வெளியில் ஒரு புது வசந்தம்
புல்வெளியில் ஒரு புது வசந்தம் புல்வெளியில் ஒரு புது வசந்தம் பனித்துளியால் அதற்கொரு மணிமகுடம் இரவின் கண்ணீர் சிந்தியதோ? நட்சத்திரங்கள் மண்ணில் சிதறியதோ? இருளின் கையெழுத்தோ ? இரவின் கால்தடமோ ? பூமியின் பலவர்ணம் எல்லாம் இறைவியின் கைவண்ண ஜாலம் பச்சை நிறத்தில் சேலை கட்டி நிலவை பொட்டாய் வைத்தாளோ ? புல்வெளியில் ஒரு புது வசந்தம் மலர்களை தூவி வாழ்த்துகிறது கண்களில் மலரும் ஆசைகளில் காதல் காவியம் ஓன்று தெரிகிறது காலம் காட்டும் கடிகாரம் வானில் சந்திர சூரியராய் ஒளிர்கிறது…