வீட்டருகில் இரண்டு தெரு தள்ளியிருக்கும் வீதி, ஆனால் அகலமான சாலை போன்றது. சமீபத்தில் ஒருமுற்பகல் நேரத்தில் சாலையினைப் பாதி அடைத்து பந்தல் போட்டுக் கொண்டிருந்தார்கள். திடீர் பந்தல்என்றவுடனே துக்க காரியமாக இருக்கலாமெனத் தோன்றியது. வெள்ளுடைகளில் குவிந்து கொண்டிருந்தகூட்டமும், அதை மரண வீடென்று வெகு எளிதாக உணர்த்தியது. வாகனங்களாலும் மனிதர்களாலும் அந்தப் பகுதியே நிரம்பிக்கிடந்தது. எல்லா மரணங்களையும் நாம் ஒரே மனநிலையோடு ஒரே அளவான துக்கத்தோடு அணுக முடிவதில்லை.கல்யாணச்சாவுகளை, எதிர்பார்த்து காத்திருந்து நிகழும் மரணங்களை சற்றே நிறைவான, பயம் தணிந்த மனநிலையோடு அணுகுகிறது. வாழவேண்டிய வயதில் எதிர்பாராத தருணத்தில் நிகழும் அகாலமரணங்களை துக்கம் விசாரிக்கும் கூட்டம் வெகு பதட்டத்தோடு அணுகுகிறது. யாருடைய சாவாகஇருந்தாலும் அகால மரணம் என்பது கூடுதல் துக்கத்தையும், ஒரு கணம் தன்னோடு பொருத்திப்பார்த்து தன்வாழ்க்கைக்கும் உத்திரவாதம் இல்லையென்ற அச்சத்தையும் கொடுத்துவிடுகின்றது. கொளுத்தும் வெயில் மதியத்தில் அந்த வீட்டின் முன்பு நிரம்பியிருந்த கூட்டமும் பரபரப்பும் அது ஒருஎதிர்பாராத மரணம் என்பதாக எனக்கு உணர்த்தியது. அந்த இடத்தைக் கடக்கும்பொழுது யாரேனும் தெரிந்தமுகங்கள் தெரிகின்றதா எனப் பார்ப்பதும், இறந்தது யாராக இருக்கும் என்று யோசிப்பதுமாக இருந்தேன்.ஒருவேளை கூட்டம் குறைவாக இருந்திருந்தால் நானும் யாரோவென அதைப்பற்றி அவ்வளவாக யோசிக்காமலே கூட இருந்திருக்கலாம். கடந்து செல்லும் ஒருவீதியில் நிகழ்ந்த மரணம் குறித்து இத்தனை பேசவேண்டுமா எனத் தோன்றலாம்.காரணம் இருக்கின்றது. அடுத்த சில நாட்களில் பந்தல் பிரிக்கப்பட்டது. பந்தல் பிரிக்கப்பட்ட தினத்திலிருந்தே மரணம் குறித்தான நினைவுகள் மறதிக்குள்…