‘துன்முகியே’ மலர்க!
’துன்முகி’ ஆண்டே மலர்ந்திடுவாய் துன்பம னைத்தும் தகர்த்திடுவாய்! வறுமை விலகச் செய்திடுவாய் பொறுமை வளரச் செய்திடுவாய்! (1) அரசியல் ஒளிரச் செய்திடுவாய் அநியாயம் அகன்றிடச் செய்திடுவாய் லஞ்சம் அஞ்சிடச் செய்திடுவாய் வஞ்சம் அனைத்தையும் அழித்திடுவாய்! (2) சூதுஅனைத்தையும் பொசுக்கிடுவாய் வாதுகள் அனைத்தையும் வதக்கிடுவாய் தீதுசெய்வோரைத் தீர்த்திடுவாய்…