1. Home
  2. சொர்க்கம்

Tag: சொர்க்கம்

சொர்க்கம் நோக்கிய பயணம்

க ல்வியைத் தேடிச் செல்வதன் மகிமை குறித்து நபிகள்நாயகம் (ஸல்) அவர்கள் குறிப்பிடும்போது ஒரு நீண்டஹதீஸில் இப்படிச் சொன்னார்கள்: ومن سلك طريقا يلتمس فيه علما سهّل الله له به طريقا إلى الجيّة. கல்வியைத் தேடி ஒருவர் ஒரு பாதையில் நடந்தால், அதன்மூலம்அவருக்குச் சொர்க்கம் செல்லும் பாதையை அல்லாஹ்எளிதாக்குகின்றான். (முஸ்லிம் – 5231) இதிலிருந்து, கல்வி நோக்கிய பயணம், சொர்க்கம் நோக்கியபயணமாகும் என்று அறியமுடிகிறது. இதற்குக் காரணம் என்ன? இறைவேதத்தையும் இறைத்தூதரின்வழிமுறையையும் கற்றறிந்து, இறைவன் படைத்துள்ள இயற்கைச்செல்வங்களை நுணுகி ஆராயும்போது, அது மனிதனுக்குஇறையச்சத்தை ஊட்டும்; நற்பண்புகளை வளர்க்கும்; ஒழுக்கமிக்கஉயர் வாழ்க்கைக்கு வழிகாட்டும். அந்த வழியில் நடப்பவர் சொர்க்கத்தை அடைவார் என்பதில் என்னசந்தேகம் இருக்க முடியும்? சொல்லுங்கள்! என்ன நடக்கிறது? ஆனால், இன்று என்ன நடக்கிறது? உலக நடப்பைச் சற்று ஆழமாகநோக்கினால் ஒரு உண்மை வெளிச்சத்திற்கு வரும். ஆம்! இன்று உலகநாடுகளை ஆள்வது மன்னர்களோ பிரதமர்களோ அல்லர். அவர்களுக்குப் பின்னால் ஒளிந்திருக்கும் மூன்று பிரதான சக்திகளேஅவர்களை இயக்கிவருகின்றன. 1. அறிவியல் (العلوم); 2. தொழில் நுட்பம்(تِقْنِيّة); 3. கார்ப்பரேட் கம்பெனிகள் (شركات متّحدة). இவை ஒவ்வொன்றிலும்நன்மைகள் இருந்தாலும் தீமைகளே அதிகம். பயன்படுத்தும் நோக்கம்,பயன்பாட்டு முறை ஆகியவற்றைப் பொறுத்தே பலனைத் தீர்மானிக்கமுடியும். அறிவியலை எடுத்துக்கொள்வோம். அறிவியல் என்றால் என்ன?நிரூபணத்தின் அடிப்படையிலும் பரிசோதனை முறைகளைக்கொண்டும் இயற்கை உட்பட உலகத்திலுள்ள அனைத்தின் அமைப்பு,இயக்கம் ஆகியவற்றை விளக்கும் அறிவுத் துறையே அறிவியல்.அல்லது விஞ்ஞானம் எனப்படுகிறது. அதாவது இறைவனின் படைப்புகளை, அவை படைக்கப்பட்டமுறையை, அதன் இயக்கத்தை இயக்க விதியை ஆராய்ந்துஅறிவதுதான் அறிவியல். படைப்புகளின் நுணுக்கங்களைஅறியும்போது படைப்பாளனின் பேராற்றல் மனிதனைவியக்கவைக்கும். அவனுடைய ஆணைகளுக்கு மாற்றமாக நடந்தால்,கடுமையாகத் தண்டித்துவிடுவான் என்ற அச்சம் பிறக்கும். அதுமனிதனைப் பக்குவப்படுத்தும்; புனிதனாக்கும். திருக்குர்ஆன் கூறும் அழகைப் பாருங்கள்: வானங்கள் மற்றும் பூமியைப் படைத்திருப்பதிலும் இரவு, பகல்மாறிமாறி வருவதிலும் அறிவுடையோருக்குச் சான்றுகள் பல உள்ளன.அவர்கள் நின்ற நிலையிலும் அமர்ந்த நிலையிலும் ஒருக்களித்துப்படுத்த நிலையிலும் அல்லாஹ்வை நினைவுகூருவார்கள். -அதாவதுநின்று தொழுவார்கள்; முடியாவிட்டால் அமர்ந்து தொழுவார்கள்;அதற்கும் முடியாதபோது படுத்துக்கொண்டு தொழுவார்கள்- வானங்களும் பூமியும் படைக்கப்பட்டது குறித்துச் சிந்திப்பார்கள். (இறுதியில் இவ்வாறு கூறுவார்கள்:) எங்கள் இறைவா! இவற்றை நீவீணாகப் படைக்கவில்லை; நீ தூயவன்; நரக வேதனையிலிருந்துஎங்களைக் காப்பாயாக!…

சொர்க்கம் – நரகம்

சொர்க்கம் – நரகம் ============== ஒரு ஊரில் ஒரு கருமி வாழ்ந்து வந்தான். அவன் மிகப் பெரிய பணக்காரன். ஆனால் யாருக்கும் உதவ மாட்டான். அவனுக்கு சொர்க்கத்தையும் நரகத்தையும் காண ஆசை வந்தது. ஒருநாள் அவனது கனவில் ஒரு பெரியவர் தோன்றினார். அவனை சொர்க்கத்துக்குக் கூட்டிச் செல்வதாகக் கூறினார்.…