பசிக்கொடுமை!
பசிக்கொடுமை! ——————————— முந்தானைத் தொட்டில் முதுகிலே தொங்கிநிற்க செங்கனித் தேன்மழலை எட்டித்தான் பார்த்திருக்கச் செங்கற்கள் தம்மைத் தலையில் சுமந்தேதான் அன்பான தாயோ வயிற்றின் பசியடக்க தன்னாலே ஆனமட்டும் நாளும் உழைக்கின்றாள்! புண்படுத்தும் ஏழ்மையைப் பார். மதுரை பாபாராஜ்