கிறித்துநாள் வாழ்த்து
கிறித்துநாள் வாழ்த்து என் பாவங்களைச் சுமப்பது நீரே உண்மையானால் என் பாவங்களால் பாதிக்கப்பட்டவரைச் சுமப்பது யார்? பாவங்களைச் சுமப்பது மேன்மையா பாதிக்கப்பட்டவனைக் காப்பது மேன்மையா? குற்றங்கள் மன்னிக்கப்பட்டால் குற்றங்கள் குறைந்திடலாகுமோ குற்றங்களை மன்னிப்பது குற்றங்களுக்குத் துணைபோவது அல்லவா? இயேசுவின் இரத்தம் செயம் வாசகம் வாசித்தேன் வருத்தம் மேலிட்டது இரத்தம் சிந்தும் நீங்கள் பாவம் அல்லவா? உயிர்களிடத்தில் அன்பு வை உரக்கச் சொன்ன மதம் உயிர்ப்பலி இடுகிறது இரத்தம் செயம் என்ற உங்கள் மதம் உயிர்ப்பலியை மறுக்கிறது. வழக்கம்போல மற்றவரைப் போல் வாழ்த்து சொல்லிவிட்டுச் சென்றிருக்கலாம் நான் முடியவில்லை என்னால் முன்னோர்கள் வழியில் சிந்திக்க முடிந்த வரையில் புதிய பார்வையில் பார்க்கிறேன் என் பார்வையில் படுவதை என் கருத்தில் எழுவதை எழுதுகிறேன் பரமபிதா வுக்காகப் பாவங்களைச் செய்யாது இருப்போம்…