1. Home
  2. கா.அப்துல் கபூர்

Tag: கா.அப்துல் கபூர்

கண்மணியே !

  உலகத்துக் கவர்ச்சிகளில் உள்ளத்தைப் பறிகொடுத்துக் கலகத்தை வளர்க்காமல் காத்திடுவாய் கண்மணியே ! ஒழுக்கத்தை உயிரைவிட உயர்வாகப் போற்றிடுவாய் ! அழுக்காறு களைந்திடுவாய் ஆரமுதக் கண்மணியே ! இறைவனின் பேரருளால் இனியவர்கள் துஆப்பேற்றால் நிறைவான நலன்களுடன் நீவளர்க கண்மணியே ! -இறையருட் கவிமணி கா அப்துல் கபூர்