கருகிய மொட்டுகளுக்குக் காணிக்கை !
பத்தோடு ஓராண்டு பறந்தோடி விட்டதுகாற்றாய் இத்தரையில் இன்னா இனியதறியா இளம்குறுத்துகள் புத்தகமும் கையுமாய் புத்தறிவுப் பெறப்போனவர்களை பத்திஎரிந்த தீநாக்கு பதம்பார்த்து விட்டதே ! குடந்தைப் பள்ளியிலே மடந்தையர்பெற்ற மலர்கள் இடம்விட்டு நகராமலே இதயம் கருகினரே ! குடமளவு கண்ணீரைக் கொட்டினரே மக்கள் தடம்மாறா நினைவுகளை தரணிக்கு அளிப்போம்…