முதுகுளத்தூரில் ஸ்டவ் வெடித்து பெண் சாவு
முதுகுளத்தூர் அருகே உள்ள புளியங்குடி பகுதியில் வசிப்பவர் பூபதி (வயது44), கரிமூட்ட வியாபாரி. இவரது மனைவி பத்ரகாளி. இவர்களுக்கு திருமணமாகி 15 ஆண்டுகள் ஆகின்றன.
கடந்த 4–ந்தேதி இரவு மண்எண்ணை ஸ்டவ் அடுப்பில் பத்ரகாளி சமையல் செய்து கொண்டிருந்தார். அப்போது எதிர் பாராதவிதமாக ஸ்டவ் வெடித்தது.
இதில் உடல் கருகிய பத்ரகாளியை சிகிச்சைக்காக முதுகுளத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பத்ரகாளி பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து முதுகுளத்தூர் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் ஜான்சிராணி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.