ஸ்ரீரங்கம் இடைத் தேர்தலில் வெற்றி:அதிமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
ஸ்ரீரங்கம் இடைத் தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றதையொட்டி திங்கள்கிழமை முதுகுளத்தூரில் மாவட்டச் செயலர் ஆர். தர்மர் தலைமையில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி, பட்டாசு வெடித்து அதிமுகவினர் கொண்டாடினர்.
முதுகுளத்தூர் பேருந்து நிலையம், அரசு மருத்துவமனை, காந்தி சிலை, தேரிருவேலி விலக்கு சாலை ஆகிய இடங்களில் அதிமுகவினர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர். நிகழ்ச்சியில் மாவட்ட இளைஞரணி துணைச் செயலர் சுந்தரமூர்த்தி, விவசாய அணி இணைச் செயலர் வி. கருப்புசாமி, இலக்கிய அணி இணைச் செயலர் அம்சுராஜ், அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள் என். ரவிச்சந்திரன், அப்துல் லத்தீப், முத்துராமலிங்கம், வடிவேல், முருகவேல், ஜெயலலிதா பேரவை இணைச் செயலர் கே. அர்ச்சுனன், வழக்குரைஞர் பிரிவு இணைச் செயலர் அறியப்பன் மற்றும் ராமர், கவுன்சிலர்கள் சீனிமுகம்மது, சண்முகபாண்டியன், கதிரேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
பரமக்குடி: பரமக்குடி பேருந்து நிலையம் மற்றும் சட்டப் பேரவை உறுப்பினர் அலுவலகம் முன் அதிமுக சார்பில் நகர்மன்றத் தலைவர் எம். கீர்த்திகா தலைமையில், முன்னாள் மாவட்டச் செயலர் எம்.ஏ. முனியசாமி, தொகுதிச் செயலர் ஆ. பாலுச்சாமி, ஒன்றிய கவுன்சிலர் எஸ். ராமுயாதவ், டாக்டர் முத்தையா ஆகியோர் முன்னிலையில் அதிமுகவினர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும், பட்டாசு வெடித்தும் கொண்டாடினர்.