தமிழ்மொழித்தேர்வுகள் =பரிசுகள் வழங்கும் மாபெரும் “தமிழ்விழா” 27-7-2014
மியன்மா தமிழ்க் கல்வி வளர்ச்சி மையம் ஆண்டுதோறும் நடத்திவரும் 2014 ஆம்
ஆண்டுக்கான தமிழ்மொழித்தேர்வுகள் நாளது 31-5-2014 நாளன்று காலை 10
மணிக்கு நாடெங்கிலுமுள்ள 18தேர்வு மையங்களில் நடைபெற்றது. தொடக்க வகுப்பு
முதல் ஏழாம்வகுப்பு வரைக்குள்ளான 2100 மாணவமணிகள் ஆர்வமுடன் வந்து
தேர்வெழுதினர்.யாங்கோன், பக்கோ, மாந்தலே, மோலமியைன், அப்பவுன், புரோம்
ஆகிய நகர்களில் உள்ள 18 தேர்வு மையங்களில் தமிழ்மொழித்தேர்வுகள்
நடைபெற்றன.
மணிக்கு நாடெங்கிலுமுள்ள 18தேர்வு மையங்களில் நடைபெற்றது. தொடக்க வகுப்பு
முதல் ஏழாம்வகுப்பு வரைக்குள்ளான 2100 மாணவமணிகள் ஆர்வமுடன் வந்து
தேர்வெழுதினர்.யாங்கோன், பக்கோ, மாந்தலே, மோலமியைன், அப்பவுன், புரோம்
ஆகிய நகர்களில் உள்ள 18 தேர்வு மையங்களில் தமிழ்மொழித்தேர்வுகள்
நடைபெற்றன.
இத்தேர்வுகளில் 1600 மாணவமணிகள் வெற்றிபெற்றனர். இவர்கள்அனைவரையும்
ஊக்கப்படுத்தி, உற்சாகப்படுத்தி, வாழ்த்தி, பரிசுகள் வழங்கும் மாபெரும்
“தமிழ்விழா” வளரும் 27-7-2014 ஆம் நாள் காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரை
இயல், இசை, நாட்டிய நிகழ்ச்சிகளுடன் மிகுந்த மகிழ்ச்சியோடும்
தமிழுணர்வூட்டும் எழுச்சியோடும் கொண்டாடப்பெறும்.
ஊக்கப்படுத்தி, உற்சாகப்படுத்தி, வாழ்த்தி, பரிசுகள் வழங்கும் மாபெரும்
“தமிழ்விழா” வளரும் 27-7-2014 ஆம் நாள் காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரை
இயல், இசை, நாட்டிய நிகழ்ச்சிகளுடன் மிகுந்த மகிழ்ச்சியோடும்
தமிழுணர்வூட்டும் எழுச்சியோடும் கொண்டாடப்பெறும்.
இவ்விழாவில் 1400
மாணவமணிகளுக்கு மேடையில் பரிசுகள் வழங்கிக் கௌரவிக்கப்படும். மாந்தலே,
அப்பவுன்,புரோம் ,மோலமியைன் நகர மாணவர்களுக்கு அவ்வப்பகுதிகளில்
பரிசளிப்பு விழா நடத்தி உற்சாகப்படுத்தப்படுவர் என்பது
குறிப்பிடத்தக்கது.மேலும் இவ்விழாவில் தமிழ்ப் படிப்பகங்கள் நடத்திவரும்
கோயில் நிர்வாகிகள் மற்றும் சமூகநல அமைப்பினர்களைப் பாராட்டி மரியாதை
செய்யவும்திட்டமிடப்பட்டுள்ளது.
மாணவமணிகளுக்கு மேடையில் பரிசுகள் வழங்கிக் கௌரவிக்கப்படும். மாந்தலே,
அப்பவுன்,புரோம் ,மோலமியைன் நகர மாணவர்களுக்கு அவ்வப்பகுதிகளில்
பரிசளிப்பு விழா நடத்தி உற்சாகப்படுத்தப்படுவர் என்பது
குறிப்பிடத்தக்கது.மேலும் இவ்விழாவில் தமிழ்ப் படிப்பகங்கள் நடத்திவரும்
கோயில் நிர்வாகிகள் மற்றும் சமூகநல அமைப்பினர்களைப் பாராட்டி மரியாதை
செய்யவும்திட்டமிடப்பட்டுள்ளது.
இம்மாபெரும் பரிசளிப்பு விழாக்கான வரும்
தமிழ் மாணவமணிகள், ஆசிரியர்கள், கோயில் நிர்வாகிகள்,சமூகநல
அமைப்பினர்கள், தமிழார்வலர்கள் சுமார் 2000 பேர்களுக்கு பகலுணவு வழங்க
நல்லன்பர் ஒருவர் பொறுப்பேற்றுள்ளார்.
தமிழ் மாணவமணிகள், ஆசிரியர்கள், கோயில் நிர்வாகிகள்,சமூகநல
அமைப்பினர்கள், தமிழார்வலர்கள் சுமார் 2000 பேர்களுக்கு பகலுணவு வழங்க
நல்லன்பர் ஒருவர் பொறுப்பேற்றுள்ளார்.
solai.thiyagarajan@gmail.com