சமூக பாதுகாப்பு திட்ட விழிப்புணர்வு முகாம்
முதுகுளத்தூர்: முதுகுளத்தூர் தேவர் திருமண மஹாலில், தமிழ்நாடு கட்டுமானம், உடலுழைப்புதொழிலாளர்களின், சமூக பாதுகாப்பு திட்ட விழிப்புணர்வு முகாம், உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் விழா, முருகன் எம்.எல்.ஏ., தலைமையிலும், ஒன்றிய குழு தலைவர் சுதந்திராகாந்தி முன்னிலையிலும் நடந்தது.
மாவட்ட தொழிலாளர் நல அலுவலர் துரை வரவேற்றார். நிகழ்ச்சியில் தொழிலாளர்களுக்கு, உறுப்பினர் அடையாள அட்டைகள் வழங்கபட்டது.
நிகழ்ச்சியில் மாவட்ட ஜெ., பேரவை பொருளாளர் மலைக்கண்ணன், ஒன்றிய ஜெ., பேரவை தலைவர் பரம்பொருள்காளிமுத்து, ஒன்றிய கவுன்சிலர்கள் தனசேகரன், முத்திரை ஆய்வாளர் கோபாலகிருஷ்ணன், தொழிலாளர் உதவி ஆய்வாளர்கள் பர்சு, லலிதரசி உட்பட பலர் கலந்து கொண்டனர்.