விழிப்புணர்வு முகாம்

Vinkmag ad

முதுகுளத்தூர், : முதுகுளத்தூர் அரசு கலைக்கல்லூரியில் சட்டப்பணிக்குழு சார்பில் விழிப்புணர்வு முகாம் நடந்தது. முகாமிற்கு வட்ட சட்டப்பணி குழு தலைவர் நீதிபதி மோகன்ராம் தலைமை வகித்தார். மாவட்ட உரிமையியல் நீதிபதி முத்துமஹாராஜன், கல்லூரி முதல்வர் வடிவேலு ஆகியோர் முன்னிலை வகித்தனர். நாட்டு நலப்பணி திட்ட கல்லூரி ஆசிரியர் சண்முகநாதன் வரவேற்று பேசினார். இதில் மாணவ, மாணவிகளுக்கு சட்டம் குறித்த விழிப்புணர்வும், பிறப்பு சான்றிதழ் பெறுவது உள்ளிட்ட பல்வேறு கருத்துகளை நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்கள் வழங்கினர்.
இதில் அன்பு தொண்டு நிறுவன தலைவர் உமையலிங்கம், வழக்கறிஞர்கள் சிவராமகிருஷ்ணன், மயில்வேல், ஹரிச்சந்திரன், முனியசாமி, முத்துகிருஷ்ணன் மற்றும் ஆசிரியர்கள் பாலமுருகன், சுரேஷ்குமார், கணேசமூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நிர்வாக உதவியாளர் பாலசுப்பிரமணியன் நன்றி கூறினார்.

News

Read Previous

படித்தால் பெரியாளாகி விடுவாய் – சிந்தனை களம் – வித்யாசாகர்

Read Next

எதற்காக நான் வாழ்ந்திருக்கிறேன் ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *