ரோட்டோர வீடுகளை சுற்றி தேங்கிக் கிடக்கும் கழிவுநீர்
முதுகுளத்தூர்:முதுகுளத்தூரில் ரோட்டோர வீடுகளை சுற்றி கழிவுநீர் தேங்கி கிடப்பதால், அப்பகுதிகளில் துர்நாற்றம் வீசுகிறது.முதுகுளத்தூர் கீழரதவீதி, நந்தா, பசும்பொன் நகர் பகுதிகளில் வாய்க்கால் வசதி இல்லாததால், வீடுகளை சுற்றிலும் கழிவுநீர் தேங்கியுள்ளது. ரோட்டோரங் களில் இருக்கும் ஒரு சில வாய்க்காலும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால் கழிவுநீர் குளம் போல் தேங்கி, கொசுக்கள் உற்பத்தியாகின்றன. இந்த ரோடு வழியாக செல்வோர் மூக்கை பிடித்தபடி செல்கின்றனர்.இதுகுறித்து நந்தா நகர் காளிமுத்து கூறுகையில், “” கழிவுநீர் செல்லும் வகையில் வாய்க்கால் அமைக்க கோரியும், வாய்க்கால் ஆக்கிரமிப்பை அகற்றக் கோரியும், பேரூராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டும் நடவடிக்கை இல்லை. வீடுகளை சுற்றிலும் கழிவுநீர் தேங்கி யுள்ளதால், குழந்தைகள் தொற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்,” என்றார்.
முதுகுளத்தூர் பேரூராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், “” கழிவுநீர் தேங்காதபடி நடவடிக்கை எடுக்க படும்,” என்றார்.