மேலாண்மை பயிற்சி முகாம்
முதுகுளத்தூர் அரசு பள்ளிகளில் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் மேலாண்மை பயிற்சி வகுப்புகள் நடைபெற்றன.
பயிற்சியின் போது உறுப்பினர்களின் கடமைகள் மற்றும் பங்களிப்பு பற்றியும் 7 மையங்களில் பயிற்சி வகுப்புகள் நடைபெற்றன. நிகழ்ச்சியில் வட்டார வள மைய மேற்பார்வையாளர் எம்.தினகர்ராஜ் தலைமை தாங்கினார். பயிற்சியினை விஜயா, எஃப்ரோம், உமாமகேஸ்வரி, கார்மேகம், முருகவேல், காமராஜ் ஆகிய பயிற்றுநர்கள் பயிற்சி அளித்தனர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அலிமாபேகம் செய்திருந்தார்.