மேலக்கொடுமலூர் குமரன் கோயிலுக்கு பக்தர்கள் யாத்திரை

Vinkmag ad

கொடுமலூர் குமரன் கோயிலுக்கு முதுகுளத்தூரிலிருந்து சனிக்கிழமை ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் யாத்திரை சென்றனர்.

 ராமநாதபுரம் மாவட்டம் மேலக்கொடுமலூரில் உள்ள திருக்குமரன் கோவிலுக்கு, பங்குனி மாதம் பக்தர்கள் பாதயாத்திரை செல்வது வழக்கம். அதன்படி முதுகுளத்தூர் மற்றும் சுற்றுவட்டார கிராம ங்களைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் சனிக்கிழமை அதிகாலை 4 மணியளவில் மேலக்கொடுமலூர் திருக்குமரனை தரிசிக்க பாதயாத்திரை சென்றனர்.

 முதுகுளத்தூர் ஐயப்ப குழு சற்குருநாதர் பாலகுருசாமி தலைமையில் செல்லும் குழுவினரை, குருநாதர் அ.திருமால், கமிட்டியாளர்கள் முருகானந்தம், முனியசாமி, குருசாமி செட்டியார் ஆகியோர் வழிநடத்திச் சென்றனர்.

  குமரன் கோவிலில் பல்வேறு சிறப்பு பூஜைகள்,அபிஷேகம் மற்றும் விளக்கு பூஜைகள் நடைபெற்றன. அன்னதானத்தை ஆர்.சண்முகம் தொடங்கி வைத்தார்.

News

Read Previous

பாரதி பிறந்த இல்ல அருங்காட்சியகம், எட்டயபுரம்

Read Next

துபாயில் கார்கள் விற்பனைக்கு ……….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *