முதுகுளத்தூர் வக்கீல் வீட்டில் திருடர்கள் கைவரிசை

Vinkmag ad

முதுகுளத்தூர்: ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பெரிய பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்த வக்கீல் அசன் முகமது. இவர் தனது சித்தி, ஓய்வு பெற்ற ஆசிரியை ஆமீனாள் பீவியுடன் கூட்டு குடும்பமாக வசிக்கிறார்.

நேற்று முன் தினம் இரவு கீழ் தள வீட்டு கதவை பூட்டி விட்டு, குடும்பத்துடன் மாடியில் தூங்கினார். இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள், நள்ளிரவில் வீட்டின் கதவை திறந்து உள்ளே புகுந்தனர். அங்கு பீரோவை உடைத்து அதிலிருந்த 81 பவுன் நகைகளை திருடிச் சென்றனர். இதன் மதிப்பு ரூ.8.50 லட்சம். ராமநாதபுரம் கைரேகை நிபுணர்கள் தடயங்களை சேகரித்தனர்.

போலீஸ் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு, சோதனை நடத்தப்பட்டது. முதுகுளத்தூர் குற்றப்பிரிவு போலீசார் விசாரிக்கின்றனர்.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1038144&Print=1

 

News

Read Previous

இசை சூழ்ந்த ஊர் – நாகூர்

Read Next

மதுரை ஐஸ் கடை அலிமா மகள் பானு மகன் வஃபாத்து

Leave a Reply

Your email address will not be published.