முதுகுளத்தூர் அருகே நகை, பணத்தை திருடியதாக 2 பேர் கைது

Vinkmag ad

முதுகுளத்தூர் அருகே திருவரங்கத்தில் 3 பவுன் நகையையும், ரூ.8 ஆயிரம் பணத்தையும் திருடியதாக 2 பேரை திங்கள்கிழமை போலீஸார் கைது செய்தனர்.

திருவரங்கத்தைச் சேர்ந்த சௌந்தரபாண்டியன் மகன் கவாஸ்கர் (28). இவர், தனது குழந்தையுடன் பள்ளிக்குச் செல்லும்போது பணம் மற்றும் நகையை குழந்தையின் பையில் வைத்திருந்தாராம்.

இதற்கிடையே கடைக்குச் சென்றுவிட்டு திரும்பி வந்து பார்த்தபோது பையிலிருந்த ரூ.8 ஆயிரம் பணம்,3 பவுன் நகையை காணவில்லையாம்.

இதுகுறித்த புகாரின்பேரில் கீழத்தூவல் போலீஸார் டி.கருங்குளத்தைச் சேர்ந்த பாக்கியம்(45), திருவரங்கத்தைச் சேர்ந்த முருகேசன் (55)ஆகியோரிடம் விசாரித்தனர். இதில், நகை மற்றும் பணத்தை அவர்கள் திருடியது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீஸார் அவர்களிடமிருந்து நகையையும்,பணத்தையும் பறிமுதல் செய்தனர்.

News

Read Previous

திருச்சி டவுண் காஜிக்கு பேத்தி

Read Next

நான் மரணிக்கிறேன்….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *