முதுகுளத்தூரில் பள்ளி ஆண்டு விழா
முதுகுளத்தூர்: முதுகுளத்தூரில் காமராஜர் மெட்ரிக் பள்ளியில் புதிய கட்டிட திறப்பு விழா, 27ம் ஆண்டு விழா, பள்ளி மாணவர்களுக்கு பரிசளிப்பு என முப்பெரும் விழா நடந்தது. நாடார் உறவின் முறை தலைவர் சிவக்குமார் தலைமை வகித்தார். தாளாளர் செல்வகுமார், உறவின் முறை துணை தலைவர் வயணபெருமாள் பொருளாளர் ஜெயராஜ், மெர்க்கன்டல் வங்கி மேலாளர் ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியர் எழிலரசி வரவேற்றார். தேசிய நல்லாசிரியர் அப்துல்காதர் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசினை வழங்கினார். விழாவில் முதுகுளத்தூர் டிஎஸ்பி கணபதி உள்பட பலர் கலந்து
கொண்டனர்.