முதுகுளத்தூரில் தொடர் மழை

Vinkmag ad

முதுகுளத்தூர் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் விவசாயிகள் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

முதுகுளத்தூர் சுற்று வட்டாரப் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்ததால் விவசாயிகள் நெல், மிளகாய், பருத்தி, கம்பு, சோளம் போன்றவைகளுக்கு உரம் வைத்தல், களை எடுத்தல் போன்ற வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கி நிற்பதால் வாகன ஓட்டுநர்கள் மற்றும் பள்ளி மாணவ,மாணவியர் அவதி அடைந்துள்ளனர். முதுகுளத்தூர் பேருந்து நிலையத்தில் கண்மாய் போல் மழை நீர் தேங்கியுள்ளதால், நீரை வெளியேற்றுவதற்கான நடவடிக்கையில் பேரூராட்சி அதிகாரிகள் ஈடுபடவேண்டும் என வியாபாரிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

News

Read Previous

அடிமைத்தனமல்ல… அருட்கொடை!

Read Next

தமிழ் இன்றும் என்றும்

Leave a Reply

Your email address will not be published.