முதுகுளத்தூரில் சுதந்திர தின கொண்டாட்டம்

Vinkmag ad

phss1முதுகுளத்தூர், கடலாடி, சாயல்குடி பள்ளி மற்றும் அரசு அலுவலகங்களில் நாட்டின் 68ஆவது சுதந்திரதினத்தை தேசியக் கொடியேற்றியும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.

முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியக் குழுத் தலைவர் சுதந்திராகாந்தி இருளாண்டி கொடியேற்றினார், ஆணையாளர் நாகேஸ்வரன், கவுன்சிலர்கள் உடை.எம். சிவக்குமார், ராஜேந்திரன், வேலுச்சாமி, மிக்கேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முதுகுளத்தூர் பேரூராட்சியில் தலைவர் சசிவர்ணம் கொடியேற்றினர். செயல் அலுவலர் இளவரசி, துணைத் தலைவர் பாசில் அமீன், முன்னாள் பேரூராட்சி தலைவர் ஷாஜஹான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளிவாசல் மேல்நிலைப் பள்ளியில் தாளாளர் எஸ். சௌக்கத்அலி கொடி ஏற்றினார். ஜமாத் தலைவர் ஏ.காதர்முகைதீன், கல்விக்குழுத் தலைவர் ஏ.ஷாஜஹான், மேல்நிலைப் பள்ளி தொடக்கப்பள்ளி தாளாளர் ஏ.சேட் ஜாஹிர் உசேன், நர்சரி பள்ளி தாளாளர் எஸ். முகம்மது இக்பால் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஓ.ஏ.முகம்மது சுலைமான் அனைவரையும் வரவேற்றார். டி.இ.எல்.சி. உயர்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியை பிரிட்டோ செல்வக்குமாரி கொடி ஏற்றி, விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கினார்.

ஸ்ரீ கண்ணா மெட்ரிக்குலேசன் பள்ளியில் நிறுவனர் கே. காந்திராஜன் கொடி ஏற்றினார். தலைமை ஆசிரியை ராமராஜேஸ்வரி முன்னிலை வகித்தார். அனைத்து பள்ளி மாணவ, மாணவிகளும் சேர்ந்து முதுகுளத்தூர் சரவணபொய்கை ஊரணியில் கொடின ஏற்றியதில் என்.எஸ்.எஸ். திட்ட ஒருங்கிணைப்பாளர் துரைப்பாண்டியன், கவுன்சிலர் நேரு, முன்னாள் வர்த்தக சங்கத் தலைவர் முத்துராமலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கடலாடியில்: ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியக் குழுத்தலைவர் வீ.மூக்கையா கொடி ஏற்றினார். ஆணையாளர் செந்தூர்பாண்டி, ஆணையாளர் (ஊராட்சிகள்) செல்லம், கவுன்சிலர்கள் மலைக்கண்ணன், சரவணன், சித்திரவேலு, கடுகுசந்தை முத்துராமலிங்கம், ஊராட்சி செயலர் வேலுச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கடலாடி அரசு மேல்நிலைப் பள்ளியில் துணைத் தலைவர் பத்மநாதன் கொடி ஏற்றி மாணவர்களுக்கு பரிசு வழங்கினார். பள்ளித் தலைமை ஆசிரியர் சுரேஷ் முன்னிலை வகித்தார்.

சரஸ்வதி வித்யாலயா மெட்ரிக்குலேசன் பள்ளியில் தலைமை ஆசிரியர் ரெங்கராஜன் கொடி ஏற்றினார். கடலாடி ஊராட்சி தலைவர் முருகன் முன்னிலை வகித்தார்.

சாயல்குடியில்: பேரூராட்சியில் தலைவர் ஜெயலெட்சுமி கண்ணப்பன் கொடி ஏற்றினார். அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பேரூராட்சி தலைவர் ஜெயலெட்சுமி கண்ணப்பன் கொடி ஏற்றினார்.

தலைமை ஆசிரியர் எஸ்.பிராங்கின் ஷேக்கப் முன்னிலை வகித்தார். டி.மாரியூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட கவுன்சிலர் செய்யது இபுராஹிம் கொடி ஏற்றினார். தலைமை ஆசிரியர் ஜான் ததெயுஸ், கவுன்சிலர் மிஸாபர் அடிமை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மலட்டாறு வி.வி.எஸ்.எம். பள்ளியில் நிறுவனர் சத்தியமூர்த்தி கொடி ஏற்றி போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கினார். தலைமை ஆசிரியை டி. அங்காள ஈஸ்வரி முன்னிலை வகித்தார். ஆசிரியை தேவகி வரவேற்றார். ஆசிரியை செல்வராணி நன்றி தெரிவித்தார்.

News

Read Previous

தமிழுக்கு கொடிபிடித்த பஞ்சாபி

Read Next

துபை ஈடிஏ மெல்கோ செய்யதுக்கு ஆண் குழந்தை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *