முதுகுளத்தூரில் அதிமுக நீர் மோர் பந்தல் திறப்பு
முதுகுளத்தூரில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டது. பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற நீர்மோர் பந்தல் திறப்பு விழாவுக்கு முதுகுளத்தூர் சட்டப் பேரவை உறுப்பினர் எம்.முருகன் தலைமை வகித்தார்.
நீர் மோர், இளநீர், தர்பூசணி பந்தலை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் மற்றும் கைத்தறி மற்றும் ஜவுளித்துறை அமைச்சர் எஸ்.சுந்தர்ராஜன் ஆகியோர் திறந்து வைத்தனர். நிகழ்ச்சியில் மாவட்ட செயலர் எம்.முனியசாமி, முன்னாள் அமைச்சர் கண்ணப்பன், மாவட்ட ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் எம்.சுந்தரபாண்டியன், ஒன்றியக் கவுன்சிலர் ஆர்.தர்மர், மாவட்ட கவுன்சிலர் சன்பிரபாகர், ஒன்றியக் குழுத்தலைவர் சுதந்திராகாந்தி இருளாண்டி, அண்ணா தொழிற்சங்க ஒன்றிய செயலர் சேதுபதி, விவசாய அணி இணைச்செயலர் வி,கருப்புச்சாமி, கவுன்சிலர்கள் தூரி மாடசாமி, முருகன், கோபால் உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.