தேர்தல் பறக்கும் படைகள் அமைப்பு
முதுகுளத்தூர் சட்டப்பேரவை தொகுதி அளவில், 3 தேர்தல் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் முதுகுளத்தூர் சட்டப்பேரவைத் தொகுதி அடங்கி உள்ளது. இந்த தொகுதியில் கமுதி, முதுகுளத்தூர், கடலாடி ஆகிய தாலுகாக்கள் உள்ளன. 3 தாலுகாக்களிலும் தேர்தல் விதிமுறை மீறலைக் கண்காணித்து உரிய நடவடிக்கைகள் எடுப்பதற்கு 3 தேர்தல் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
தனி துணை வட்டாட்சியர் வீரராஜா, கூட்டுறவு சார்பதிவாளர்கள் கண்ணதாசன், குணசேகரன் ஆகியோர் தலைமையிலான தேர்தல் பறக்கும் படையில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்களும் அடங்கி உள்ளனர். இது தவிர கூட்டுறவு அதிகாரிகள் குமரன், தண்டபாணி, ராஜேந்திரன் ஆகியோர் தலைமையிலான 3 கண்காணிப்பு குழுக்களும் நியமிக்கப்பட்டுள்ளன. 3 தாலுகாக்களிலும் தேர்தல் விதி முறைகளை மீறும் அரசியல் கட்சியினரைக் கண்டு பிடித்து, போலீஸில் புகார் செய்து, வழக்குகள் பதிவு செய்ய வைப்பதில் தேர்தல் பறக்கும் படையினர் மற்றும் கண்காணிப்புப் குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.