தேர்தல் பறக்கும் படைகள் அமைப்பு

Vinkmag ad

முதுகுளத்தூர் சட்டப்பேரவை தொகுதி அளவில், 3 தேர்தல் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் முதுகுளத்தூர் சட்டப்பேரவைத் தொகுதி அடங்கி உள்ளது. இந்த தொகுதியில் கமுதி, முதுகுளத்தூர், கடலாடி ஆகிய தாலுகாக்கள் உள்ளன. 3 தாலுகாக்களிலும் தேர்தல் விதிமுறை மீறலைக் கண்காணித்து உரிய நடவடிக்கைகள் எடுப்பதற்கு 3 தேர்தல் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

தனி துணை வட்டாட்சியர் வீரராஜா, கூட்டுறவு சார்பதிவாளர்கள் கண்ணதாசன், குணசேகரன் ஆகியோர் தலைமையிலான தேர்தல் பறக்கும் படையில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்களும் அடங்கி உள்ளனர்.  இது தவிர கூட்டுறவு அதிகாரிகள் குமரன், தண்டபாணி, ராஜேந்திரன் ஆகியோர் தலைமையிலான 3 கண்காணிப்பு குழுக்களும் நியமிக்கப்பட்டுள்ளன. 3 தாலுகாக்களிலும் தேர்தல் விதி முறைகளை மீறும் அரசியல் கட்சியினரைக் கண்டு பிடித்து, போலீஸில் புகார் செய்து, வழக்குகள் பதிவு செய்ய வைப்பதில் தேர்தல் பறக்கும் படையினர் மற்றும் கண்காணிப்புப் குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

News

Read Previous

துபை அல் அமீன் உணவகம்

Read Next

மார்ச் 28, ஜித்தாவில் வரவேற்பு விழா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *