திருவரங்கத்தில் ஜீயர் சுவாமிகள் பிரார்த்தனை
முதுகுளத்தூர் அருகே திருவரங்கத்தில் உள்ள ஸ்ரீ ரெங்கநாதர் கோயிலில் வெள்ளிக்கிழமை ஜீயர் சுவாமிகள் உலக நலனுக்காக பிரார்த்தனை செய்தார்.
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் வட்டம் திருவரங்கத்தில் அமைந்துள்ள தேவஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட ஸ்ரீ ரெங்கநாதர் கோயிலில், கிராம மக்களுக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் சுவாமிகள் மங்களா சாசனம் செய்து வைத்தார்.
கோயிலில் உலக மக்கள் நலனுக்காக பிரார்த்தனை செய்யப்பட்டது.
தமிழர் திருநாள் பொங்கலை முன்னிட்டு கிராம மக்களுக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் சுவாமிகள் ஆசி வழங்கினார். நிகழ்ச்சியில் ஸ்ரீவில்லிபுத்தூர் திருமலை நம்பிகள்,திருவரங்கம் விங்கமூர் சுதர்சன ஐயங்கார், ராமநாதபுரம் தேவஸ்தான பொறுப்பாளர் ஆடலரசன், சமூக ஆர்வலர் நம்பி நாராயணன், காளிகோயில் பொறுப்பாளர் சந்திரன் மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனர்.