தஞ்சாக்கூரில் “அம்மா’ திட்ட முகாம்
முதுகுளத்தூர் தாலுகா காக்கூர் உள்வட்டம் பொசுக்குடி குரூப்பைச்சேர்ந்த தஞ்சாக்கூரில் அம்மா திட்ட முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
தஞ்சாக்கூரில் நடைபெற்ற அம்மா திட்ட முகாமுக்கு முதுகுளத்தூர் வட்டாட்சியர் செ.ராமமூர்த்தி தலைமை தாங்கினார். சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியர் பவானி, வட்ட வழங்கல் அலுவலர் விஜயகுமார், மண்டல துணை வட்டாட்சியர்இந்திரா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முகாமில் முதியோர் உதவித்தொகை, பட்டா மாறுதல், குடும்ப அட்டையில் பெயர் நீக்கம், சேர்த்தல் என 17 மனுக்கள் பெறப்பட்டன. அதில் 5 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது. முகாமில் வருவாய் ஆய்வாளர் ஜெயசித்ரா, கிராம நிர்வாக அலுவலர் சரண்யா, கிராம உதவியாளர் கண்ணாயிரம் உள்பட கிராம பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.