செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பொறுப்பேற்பு

Vinkmag ad

ராமநாதபுரம் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலராக பணியாற்றி வந்த ப.காந்தி சென்னையில் கூட்டுறவுத்துறையின் மக்கள் தொடர்பு அதிகாரியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து திருப்பூர் மாநகராட்சி மக்கள் தொடர்பு அதிகாரியாக பணியாற்றி வந்த கோ.அண்ணாத்துரை ராமநாதபுரம் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அதிகாரியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டு திங்கள்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார்.

         தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியை சொந்த ஊராகக் கொண்ட இவர் இதற்கு முன்பு புதுக்கோட்டை, திருவள்ளூர், நாகப்பட்டிணம் உள்ளிட்ட மாவ்டடங்களிலும் மக்கள் தொடர்பு அதிகாரியாக பணியாற்றியவர்.

 புதிதாக பொறுப்பேற்றுக் கொண்ட மக்கள் தொடர்பு அதிகாரி கோ.அண்ணாத்துரை ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் எஸ்.நடராஜனை நேரில் சந்தித்தும் வாழ்த்துப் பெற்றார்.

News

Read Previous

ஆரஞ்சுப் பழம்

Read Next

நான்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *