காளி கோயிலில் வருடாபிஷேக விழா

Vinkmag ad

முதுகுளத்தூர் அருகே உள்ள பூக்குளத்தில் அமைந்துள்ள இளங்கம்மாள் காளி, கருப்பனசாமி, அய்யனார் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு முதல் ஆண்டு வருடாபிஷேக விழா நடைபெற்றது.

கோயில் பொறுப்பாளர் ராமசாமி தலைமை வகித்தார். நிர்வாகிகள் பழனி முருகன், வாசுதேவன், இளங்கோவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் அக்னி குண்டம் வளர்க்கப்பட்டு, அபிஷேகங்கள் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

திருவிளக்கு பூஜையும், பொது அன்னதானமும் நடைபெற்றன. இதில் சுற்று கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பொங்கல் வைத்து வழிபட்டனர்.

 

News

Read Previous

நின்னுயிரும் பல்லுயிரும்

Read Next

செப்டம்பர் 21 முதல் அஜ்மானில் இலவச மருத்துவ ஆலோசனை முகாம்

Leave a Reply

Your email address will not be published.