கமுதியில் காங். எம்எல்ஏ வாக்காளர்களுக்கு நன்றி

Vinkmag ad

கமுதி தெற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதியில் முதுகுளத்தூர் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ மலேசியா பாண்டி 30க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு திமுக நிர்வாகிகளுடன் நேரில் சென்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார்.
முதுகுளத்தூர் சட்ட மன்ற தொகுதி காங். எம்எல்ஏ மலேசியா பாண்டி நேற்று கமுதி தெற்கு ஒன்றியத்திற்கு உடபட்ட பேரையூர், பீட்டர்புரம், சாமிபட்டி, சேந்தகோட்டை, சங்கரப்பன்பட்டி, செங்கோட்டைபட்டி, கீழவலசை, செங்கப்படை, தாதாகுளம், இடையன்குளம், புதுக்கோட்டை, தோப்படைபட்டி, ஊ.கரிசல்குளம், நெறிஞ்சிபட்டி, கோவிலாங்குளம், ஆரைகுடி, காத்தனேந்தல், குமிலாங்குளம், பறையான்குளம், கொம்பூதி, மோயங்குளம் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு சென்றார்.

உடன் கமுதி தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் செந்தூர்பாண்டியன், மாநில இலக்கிய அணி துணை செயலாளர் பெருநாழி போஸ், கமுதி நகர செயலாளர் அம்பலம், முன்னாள் திமுக ஒன்றிய கவுன்சிலர்கள் குருவையா, பெயாள் என்ற முனியசாமி, ஊராட்சி மன்ற தலைவர்கள் காந்தி, கோவிலாங்குளம், ராமலிங்கம், உடையநாதபுரம், கமுதி காங்கிரஸ் நகர் தலைவர் படக்கடை கோவிந்தன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் பெருமாள், திமுக, காங்கிரஸ், புதிய தமிழகம், கட்சி நிர்வாகிகள் மற்றும் திமுக கூட்டணி கட்சி நிர்வாகிகள் சென்றனர். கிராமங்களில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து பேசினார்.

News

Read Previous

ஜப்பானிய நீர் சிகிச்சை

Read Next

ஹுதைபிய்யா உடன்படிக்கையின் தாக்கங்கள்

Leave a Reply

Your email address will not be published.