கனடா பல்கலை. டீனின் பாராட்டுப் பட்டியலில் முதுகுளத்தூர் இளைஞர்

Vinkmag ad

கனடா பல்கலையில் எம்.எஸ்.ஸி. பட்டம் பெற்ற முதுகுளத்தூர் இளைஞர்
சென்னை : சென்னையில் ஈடிஏ மெல்கோ நிறுவன பொது மேலாளராகப் பணிபுரிந்து வருபவர் ஹெச். ஹஸன் அஹமது.
இவரது மகன் முஹம்மது அப்துல் ரவூஃப் நிஸ்தர் கனடாவின் வான்கூவர் ஐலேண்ட் பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ. பட்டத்தை க‌டந்த‌ 11.02.2012 சனிக்கிழமை இந்திய நேரப்படி காலை 5 மணிக்கு பெற்றார் என்ற‌ செய்தியினை முதுகுள‌த்தூர்.காம் மூல‌ம் அறிந்திருப்பீர்க‌ள்.
மேலும் த‌ற்போது இலண்டனின் ஹெர்ட் ஃபோர்ட் ஷையர் பல்கலைக்கழகத்தில் மாஸ்டர் ஆஃப் இண்டர்னேஷன்ல் பிசினஸ் என்ற‌ பட்டத்தைப் பெற்றுள்ளார்.
கனடாவில் எம்.எஸ்.ஸி ம‌ற்றும் எம்.பி.ஏ. பட்டம் பெற்ற முஹம்மது அப்துல் ரவூஃப் நிஸ்தர்க்கு வாழ்த்துக்கள் !
கனடாவில் இப்பட்டங்க‌ளைப் பெற்ற முதுகுளத்தூரைச் சேர்ந்த முதல் இளைஞர் இவரே என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் கனடாவின் வான்கூவர் ஐலாண்ட் பல்கலைக்கழகத்தின் டீனின் பாராட்டுப் பட்டியலிலும் இடம் பெற்றுள்ளார் முஹம்மது அப்துல் ரவூஃப் நிஸ்தர். கல்வியில் சிறந்து விளங்கியமைக்காக இந்த பாராட்டு கிடைத்துள்ளது.
மேலும் பல பாராட்டுக்களைப் பெற்று நாட்டுக்கும், ஊருக்கும், சமுதாயத்திற்கும் பெருமை தேடித்தர துஆச் செய்கிறோம்.

News

Read Previous

“ஆறு மாசமா குடிநீர் இல்லை’:அதிகாரிகள் சிறைபிடிப்பு

Read Next

உபதேசம் என்பது உலமாக்களின் தனி உடைமையா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *