என்.எஸ்.எஸ் முகாம் தொடக்க விழா

Vinkmag ad

முதுகுளத்தூர் அருகே மீசல் ஊராட்சியில் நாட்டு நலப்பணித் திட்ட முகாம் தொடக்க விழா சனிக்கிழமை நடைபெற்றது.
முதுகுளத்தூர் சோணைமீனாள் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் சார்பில் நாட்டுநலப்பணித்திட்ட முகாம் மீசல் ஊராட்சியில் நடைபெறுகிறது. முகாம் தொடக்க விழாவுக்கு சோணைமீனாள் அறக்கட்டளை தலைவர் சோ.அசோக்குமார் தலைமை வகித்தார். தாளாளர் ரெங்கநாதன், முதல்வர் எஸ்.கோவிந்தராஜன், பிரபக்களூர் முன்னாள் ஊராட்சி துணைத் தலைவர் ராஜேந்திரன், கிராமத் தலைவர் கோவிந்தராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
திட்ட அலுவலர் திலீப்குமார் வரவேற்றார். முகாமைப் பற்றி பேராசிரியை மலர்விழி எடுத்துரைத்தார். முகாமிற்கான ஏற்பாடுகளை திட்ட ஒருங்கிணைப்பாளர் முகமது யூசுப் செய்திருந்தார்.

News

Read Previous

சிங்கமில்லாக் காடு

Read Next

காற்றிலே பாயுது மின்சாரம் : புதிய சார்ஜர்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *