உயிரோடிருப்பவர் இறந்து விட்டதாக கூறியதால் பரபரப்பு

Vinkmag ad

உயிரோடு இருப்பவர் இறந்துவிட்டதாக கூறி ஓட்டுப்போட அனுமதிக்காததால் பரபரப்பு. #முதுகுளத்தூர் இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தெற்கு பகுதியில் வசித்து வருபவர் அசக்மைதீன் இன்று காலை 9.30 மணிக்கு வாக்களிப்பதற்கு (வாக்குசாவடி எண் 174 ) சென்றுள்ளார்.

தேர்தல் அதிகாரிகள் உங்களுடைய வாக்கு சீட்டு இல்லை என கூறியதோடு தாங்கள் இறந்துவிட்டீர்கள் உங்களால் வாக்களிக்க முடியாது என்றும் கூறியுள்ளனர். இதனால் வேதனையடைந்த அசக்மைதீன் தேர்தல் அதிகாரிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகளிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மாவட்ட ஆட்சியர் , தேர்தல் ஆணையம் எனது வாக்கினை செலுத்துவதற்கு ஏற்பாடு செய்யவேண்டும் என்றும், நான் இறந்ததாக வட்டாட்சியர் அலுவலகம் எவ்வாறு சான்றளிதது என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். இதனால் அங்கு சிறிதுநேரம் பதற்றம் ஏற்பட்டது.

News

Read Previous

வாக்களிப்போம் வாருங்கள் !

Read Next

சென்னையில் கூட்டு திருமண நிகழ்ச்சி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *