“அம்மா’ திட்ட முகாம்
முதுகுளத்தூர் அருகே பெருங்கருணையில் வெள்ளிக்கிழமை அம்மா திட்ட முகாம் நடைபெற்றது.
முகாமுக்கு சமூக பாதுகாப்பு நலத்துறை வட்டாட்சியர் பவானி தலைமை தாங்கினார்.
வட்ட வழங்கல் அலுவலர் விஜயக்குமார், வருவாய் ஆய்வாளர் மதியழகன், கிராம நிர்வாக அலுவலர் ராமமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஊராட்சித் தலைவர் இருளாயி பெருமாள் அனைவரையும் வரவேற்றார். முகாமில் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கல் தொடர்பான மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது.