“அம்மா’ திட்ட முகாம்

Vinkmag ad

முதுகுளத்தூர் தாலுகா காக்கூர் ஊராட்சியில் சமத்துவபுரத்தில் வெள்ளிக்கிழமை அம்மா திட்ட முகாம் நடைபெற்றது.

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் க. நந்தக்குமாரின் உத்தரவின் பேரில் முதுகுளத்தூர் அருகே உள்ள காக்கூர் ஊராட்சி ஒன்றியம் சமத்துவபுரத்தில் அம்மா திட்ட முகாம் நடைபெற்றது. முகாமுக்கு காக்கூர் ஊராட்சி மன்றத் தலைவர் போஸ் தலைமை தாங்கினார். முகாமில் குடும்ப அட்டை வழங்குதல், பட்டா மாறுதல், வருமானம் மற்றும் இருப்பிடம் சான்றிதழ், வீட்டுமனைப் பட்டா வழங்குதல், முதியோர் உதவித்தொகை என 18 மனுக்கள் பெறப்பட்டு தீர்வு காணப்பட்டன.முகாமில் சமூக பாதுகாப்பு திட்ட தனி வட்டாட்சியர் பவானி, வருவாய் ஆய்வாளர் ஜெயசித்ரா, கிராம நிர்வாக அலுவலர் ரகுபதி உள்பட காக்கூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட கிராமங்களில் இருந்து பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

News

Read Previous

வசிப்பிடப் பகுதியிலேயே அனைத்து சான்றிதழ்களும் பெறும் வசதி

Read Next

உணர்வுகள் நிபந்தனைகளுக்குட்பட்டது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *