“அம்மா’ திட்ட முகாம்கள்

Vinkmag ad

முதுகுளத்தூர் அருகேயுள்ள ஆதனக்குறிச்சி ஊராட்சியில் அம்மா திட்ட முகாம் நடைபெற்றது.

இம்முகாமிற்கு வட்டாட்சியர் எஸ்.ராமமூர்த்தி தலைமை தாங்கினார்.சமூக நல பாதுகாப்பு திட்ட வட்டாட்சியர் பவானி, வட்ட வழங்கல் அலுவலர் விஜயக்குமார்,மண்டல துணை வட்டாட்சியர் லலிதா ஆகியோர் முன்னிலை வகித்தார். முகாமில், பயனாளிகளிடமிருந்து 15 மனுக்கள் பெறப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது. குடும்ப அட்டையில் பெயர் நீக்கம்,சேர்த்தல்,திருத்தம் செய்யப்பட்டன. முகாமில் வருவாய் ஆய்வாளர் ஜெயசித்ரா,கிராம நிர்வாக அலுவலர் சரண்யா,காக்கூர் ஊரட்சி தலைவர் போஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக, ஊராட்சித் தலைவர் மகாதேவி ஆறுமுகம் வரவேற்றார்.

எஸ்.தரைக்குடி ஊராட்சி, அன்னபூவநாயக்கன்பட்டியில் அம்மா திட்ட முகாம் கடலாடி வட்டாட்சியர் வி.விஜயா தலைமையில் நடைபெற்றது. சமூக நல பாதுகாப்பு திட்ட வட்டாட்சியர் எம்.லட்சுமி, வட்ட வழங்கல் அலுவலர் செந்தில்முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமில், குடும்ப அட்டையில் பெயர் நீக்கம்,சேர்த்தல்,திருத்தம் தொடர்பாக பொதுமக்கள் 40 மனுக்கள் கொடுத்தனர். அனைத்து மனுக்களுக்கும் தீர்வு காணப்பட்டது.முகாமில் வருவாய் ஆய்வாளர் ஆண்டி,கிராம நிர்வாக அலுவலர் மணிகண்டன் ஆகியோர் கலந்து கொண்டனர். முன்னதாக, ஊராட்சி தலைவர் கொலுசம்மா வரவேற்றுப் பேசினார்.

News

Read Previous

துபாயில் ரூம் வாடகைக்கு …..

Read Next

ஒற்றுமை என்ற கயிற்றை கெட்டியாக பிடித்துக் கொள்ளுங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *