அதிமுக சாதனை விளக்க பொதுக்கூட்டம்
முதுகுளத்தூர் பேருந்து நிலையம் அருகில் அதிமுக அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் ஒன்றிய கழகத்தின் சார்பில் நடைபெற்றது.
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பேருந்து நிலையம் அருகே அதிமுக அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியக்கழக செயலாளர் ஆர்.தர்மர் தலைமை தாங்கினார். ஒன்றியக்குழு தலைவர் அ.சுதந்திராகாந்தி இருளாண்டி,கவுன்சிலர் உடை எம்.சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் அதிமுக அரசின் சாதனைகளைப் பற்றி தலைமைக் கழக பேச்சாளர் திருப்பூர் சாந்தி பேசுகையில்: தமிழக முதல்வரின் திட்டங்களான விலையில்லா அரிசி, மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறிகள் வழங்கும் திட்டம், 10 மற்றும் பனிரெண்டாம் வகுப்பு படித்த மாணவ,மாணவிகளுக்கு கல்வி ஊக்கத்தொகை, ஏழை பெண்களுக்கு திருமண நிதியுதவி மற்றும் தாலிக்கு 4 கிராம் தங்கம் வழங்கும் திட்டம்,பள்ளி மாணவ,மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினி, மிதிவண்டி,கல்வி உதவித் தொகை வழங்கும் திட்டம், ஏழை மக்களுக்காக அம்மா உணவகங்கள், சூரிய சக்தியுடன் கூடிய பசுமை வீடுகள் திட்டம், ஏழை,எளிய மக்களுக்காக விலையில்லா கறவை மாடுகள்,வெள்ளாடுகள் வழங்கும் திட்டம்,கோயில்களில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டம், போன்ற அரசின் பல்வேறு நலத்திட்டங்களைப் பற்றி விளக்கிப் பேசினார்.