கருத்தரிக்கும் முன் ஆலோசனை.

Vinkmag ad

நீங்கள் சமீபத்தில் திருமணம் ஆனவரா? அல்லது சீக்கிரத்தில் திருமணம் செய்து கொள்ளப்போகிறீர்களா? அப்படியென்றால் நீங்கள் கட்டாயம் இந்த ஆலோசனை பெற வேண்டும்.

எல்லோரும் குழந்தைகளை படிக்க வைக்க திட்டமிடுகிறார்கள் – வீடு கட்ட திட்டமிடுகிறார்கள்-கல்யாணம் செய்ய திட்டமிடுறார்கள்- எத்தனை பேர் குழந்தை பெறுவதை திட்டமிடுகிறார்கள்?

நான் ஆரோக்கியமாக இருக்கின்றேனா ? குழந்தை பெற்றுக்கொள்ள எனக்கு சரியான வயதா? எனது இரத்த அளவு, சர்க்கரை அளவு, எடை சரியாக இருக்கிறதா? என்னுடைய நிதி நிலைமை , குடும்ப சூழ்நிலை சரியாக இருக்கிறதா?

எத்தனை பேர் மேற்சொன்ன கேள்விகளுக்கு பதில் தெரிந்து கொண்டு கர்ப்பமாகிறார்கள் என்று கேட்டால், நூற்றில் பத்து பேர் கூட கிடையாது. நிறைய பேர் கர்ப்பம் தரித்த பிறகு

எனக்கு சின்ன வயது ,எனக்கு வருமானம் பற்றவில்லை, எனக்கு குடும்பசூழ்நிலை சரியில்லை, இது ஆடி மாதம், எனவே இப்பொழுது குழந்தை வேண்டாம், கருக்கலைப்பு செய்து கொள்கிறேன் என்று வருகிறார்கள். இந்த விஷயங்கள் முன்கூட்டி தெரிந்தவை தானே? கருத்தரித்தபின் அதனை கலைப்பது நம் குழந்தையை நாமே கொலை செய்வது போலதானே? அதை செய்யலாமா? முன்கூட்டியே திட்டமிட்டு உங்களுக்கு எப்பொழுது வேண்டுமோ அப்பொழுது கர்ப்பம் தரிக்கலாமே? எனவே திட்டமிடுங்கள். நீங்கள் என்ன செய்ய வேண்டும் ?

கருத்தரித்தவுடன் முதல் ஆலோசனை

சிறுநீர்ப்  பரிசோதனை

முதல் குழந்தை பெறுவது என்பது ஒரு அழகான கவிதையை வடிப்பது போன்றது. அதன் முதல் பல்லவி அழகாக அமைய வேண்டும். முதலில் தாய்க்கு சந்தோஷம். நான் ஒரு முழுமையான பெண் என்று உலகுக்கு வெளிப்படுத்தும் ஒரு சந்தர்ப்பம். சந்தோஷம், பயம், வெட்கம் எல்லாம் கலந்த நிலை. இந்நிலையில் முதன் முதலில் மருத்துவரை எப்பொழுது பார்க்கவேண்டும்? ஏன் பார்க்கவேண்டும்? என்று தெரிந்து கொள்ளுங்கள்.

மாதவிடாய் வரவில்லை என்றால் ஒரு வாரம் தள்ளிய உடனே மருத்துவரை பார்த்து சிறுநீர் பரிசோதனை செய்து கர்ப்பம் தான் என்று உறுதி படுத்திக்கொள்ள வேண்டும். ஏன் இவ்வளவு சீக்கிரம் பார்க்க வேண்டும்? ஆரம்பத்தில் கர்ப்பத்தை உறுதிப்படுத்தும் பொழுது பிரசவதேதி சரியாக கணிக்க முடியும். கர்ப்பம் நன்றாக இருப்பதற்கான சத்து மருந்துகளை சாப்பிடமுடியும். ஒரு சில பேருக்கு கர்ப்பம் இல்லாமல் வெறுமனே தள்ளிப்போவது உண்டு. இந்த மாதிரி சமயங்களில் 50 நாள்கழித்தோ, 60 நாள் கழித்தோ மாதவிடாய் வரும்போது அது கர்ப்பமாயிருந்து கலைகிறதா அல்லது வெறுமனே தள்ளி வந்ததாஎன்று மிகுந்த குழப்பமாக இருக்கும் ஏற்கனவே பரிசோதித்திருந்தால் இந்த குழப்பம் இருக்காது. தேவையில்லாமல் ஸ்கேன், டி & சி என்று எதுவும் செய்ய தேவையிருக்காது. மேலும் ஏமாற்றத்தையும் தவிர்க்கலாம். இந்த சிறுநீர் பரிசோதனையை இப்பொழுதெல்லாம் நீங்கள் வீட்டீலேயே கூட செய்யலாம். மிகவும் எளிதானது.        பரிசோதனை அட்டையில் 5 நிமிடத்திற்குள் இரண்டு கோடுகள் வந்தால் கர்ப்பம். ஒரு கோடு வந்தால் கர்ப்பம் இல்லை.

இந்த பரிசோதனை கர்ப்பமா இல்லையா என்றுமட்டும் தான் தெரிவிக்கும். கர்ப்பம் நன்றாக இருக்கிறதா, இல்லையா, கருப்பையில் இருக்கிறதா அல்லது பலோப்பியன் குழாயில் தங்கியிருக்கிறதா, ஒற்றையா, இரட்டையா, எத்தன மாதம் என்று தெரிவிக்காது. அதோடு மட்டுமல்ல சிறுநீர் பரிசோதனையில் ஒரு சில பேருக்கு , நூற்றில் ஒருவருக்கு கர்ப்பம் இருக்கும் போதும் இல்லையென்று காட்டும். கர்ப்பமாக இல்லாமல் இருந்தாலும் இருக்கிறதாகக் காட்டும். மூன்று மாதம் முடிந்து விட்டால் கூட சிறுநீர் பரிசோதனையில் தெரியாமல் போகலாம்.

இதற்கெல்லாம் என்னதான் தீர்வு? இருக்கவே இருக்கிறது ஸ்கேன். மக்களுக்கும் மருத்துவருக்கும் மகத்தான  வரப்பிரசாதமாக அமைந்திருக்கும் ஸ்கேனைப் பற்றி அடுத்த பாகத்தில் தெரிந்து கொள்ளலாம்.

டாக்டர். க.பாலகுமாரி
மகப்பேறு மருத்துவர்.
செல்.98400 86564.

– உங்கள் வயது 21 முதல் 35க்குள் இருக்கவேண்டும்

– உங்கள் எடை சரியாக இருக்கவேண்டும். எது சரியான எடை என்று உங்கள் டாக்டரிடம் கேட்டு தெரிந்து    கொள்ளுங்கள். குறைவாக இருந்தால் சத்துள்ள ஆகாரம் சாப்பிட்டு எடையை கூட்டுங்கள். அதிகமாக இருந்தால்  எண்ணெய், சர்க்கரை பொருட்களை தவிர்த்து, உடற்பயிற்சி செய்து எடையை குறையுங்கள்.

உங்கள் உடல் ஆரோக்யம் நல்ல மண் போன்றது. நல்ல மண்ணில் விதைக்கப்படும் விதைகளே வளமான  செடிகளாகவும், மரங்களாகவும் ஆகும்.

உங்கள் பரம்பரையில் வியாதிகள் இருந்தால், அது உங்கள் குழந்தைக்கு வரக்கூடிய வாய்ப்புகள் என்ன?அதை எப்படி கண்டுபிடிப்பது? அதை தடுக்க முடியுமா ? என்று கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.

–  உங்களுக்கு ஆஸ்துமா, வலிப்பு, இரத்தகொதிப்பு, சர்க்கரைவியாதி, மன அழுத்தம், ஆகிய பிரச்சனைகள் இருந்தால் உங்கள் மருத்துவரிடம் நீங்கள் கருத்தரிக்க விரும்புவதைத் சொல்லி எந்த மாத்திரைகளைச் சாப்பிடலாம், எந்த மாத்திரைகளை சாப்பிடக்கூடாது என்று கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.

உங்கள் பொருளாதார சூழ்நிலையும், குடும்ப சூழ்நிலையும்,சரியாக இருக்கின்றதா என்று பார்த்துக் கொள்ளுங்கள்.

–  உங்கள் இரத்த அளவு, இரத்த கொதிப்பு, சர்க்கரை, கொழுப்பு, இரத்த குரூப் என்ன என்று தெரிந்து கொள்ளுங்கள்

–  கர்ப்பம் தரிக்க வேண்டும் என்று நினைக்கும் காலத்திலிருந்தே போலிக் ஆசிட் எனப்படும் மாத்திரையை எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த மாத்திரை குழந்தையின் நரம்பு மண்டலத்தில் வரும் சில குறைபாடுகளை தவிர்க்க கூடியது. இது கர்ப்பம் தரித்தபின் சாப்பிடுவதைவிட கர்ப்பம் தரிக்கும் முன் போடுவது அவசியம்.

எனவே உங்கள் ஆயிரங்காலத்து பயிரை பெற அழகாக திட்டமிடுங்கள்

admin

Read Previous

வெங்காயத்தின் 50 மருத்துவ குணங்கள்

Read Next

உலகப் பொருளாதாரச் சிக்கலுக்கு இஸ்லாம் கூறும் தீர்வு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *